பக்கம் எண் :

33

3.   தேவர் முனிவர்பகை தீர்ந்தோம் என்று
          சென்னியில்பூந் துழாய்           முடிக்க
     பூவுல கத்துள்வேதியர்எல் லோரும்
          புகழும்வே தாகமம்              படிக்க
     பாவி இலங்கையின்மேல் சூரியன் தேரிலுள்ள
          பச்சைப்பரி ஏழும்                   நடிக்க
     ராவண னாதி இருக்கின்ற ராட்சதர்
          யாவர்க்கும் இடக் கண்கள்        துடிக்க-ஆதி (பரப்)

---------

கௌசிகர் இராமனைக் குறித்துக் கேட்குதல்

விருத்தம் -7

மைந்தர்இவ் வாறு வந்து வதிஷ்டனால் பேரும்பெற்றார்
அந்தநாள் விசுவா மித்திரன் அணிதச ரதன்முன் வந்தான்
இந்தநாள் எனது வேள்வி இராமனால் முடியவேணும்
தந்திட இதுநல் வேளை தாவென்றான் காவென்றானே

தரு-6

மோகனராகம்                         அடதாளச்சாப்புத் தாளம்

பல்லவி

     ராமனைத் தருவாய் - செகரட்சக
     ராமனைத் தருவாய்                  (ராம)

அநுபல்லவி

     தாமசம் செப்பாதே-தசரதேந்திரா
          இப்போதே                         (ராம)

சரணங்கள்

1.    அரன்பக்கம்              செல்வேன்
          அரிமுன்னே     சொல்வனே்
     இரண்டும் தப்பினால் உனைவிட்
          டெவரால் பகை வெல்வேன்      (ராம)

2.    தாடகைப்            பாவி
          தவிர்த்தாள்என்  வேள்வி
     பீடைவராமற் காத்தாற்
          பிழைக்குமென்   ஆவி          (ராம)