34 3. உம்பர் வி சாரம் ஒழிக்க அந் நேரம் சம்பர னைக்கொன்றாயே தயவாய் இந் நேரம் (ராம) 4. கோபத்தில் ருத்திரன் குருவிசுவா மித்திரன் ஆபத்துக் காக்க வேணும் அதனால் உன் புத்திரன் (ராம) ------- சக்கிரவர்த்தி அதை மறுத்தல் விருத்தம்-8 சொல்லிது முனிவர் சொல்லத் துடித்தனன் தசர தேந்திரன் சில்லிது வேள்விக் காகச் சிறுபிள்ளை ராமன் ஏன்தான் சல்லியம் செய்யும், அந்தத் தாடகை தனைநான் கொல்வேன் பல்பல உரையேன் திராணி பார்என்பான் நேர்என் பானே. தரு-7 ஸ்ரீராகம் அடதாளச்சாப்புத் தாளம் பல்லவி ராமன் இதுக்கோ அவன்வர வேணும் நான் வருகிறேன் காணும் (ராம) அநுபல்லவி பூமிஅரச னென்றுநான் இருந்தென்ன கொள்ளை சாமிஅவன்கை ஏந்துகுழந்தைப் பிள்ளை (ராம) சரணங்கள் 1. ஏனிந்த தோத்திரம்-தாடகை எனக்கெம் மாத்திரம் வானுளோர் வந்துதடுத்தாலும் அடிக்கிறேன் நானே வந்துன் வேள்வியை முடிக்கிறேன் (ராம) 2. பேயைக் கொல்வ தரிதோ-காரியம் பெரிதோ வீரியம் பெரிதோ ஆயுதம் பிடிக்கறியான்கேளாய்ஒரு சொல்லை வாயில் முலைப்பால் மணம்மாற வில்லை (ராம) |