330 கண்பொறி கலங்க இறைத்தான்-சிலபேர்களை மண்களில் அழுந்த மறைத்தான்-கடல்கடந்த காலால் அனேகம்பேரை வாலால் அனேகம்பேரை கையால் சிலபேர்களை மெய்யால்-சிலபேர்களை கசக்கி மூளைகள் பொழிந்தான்-கரும்பு போலே நசுக்கிச் சாறுகள் பிழிந்தான் - அரக்கியர்க்கு கணவனைக் குமரனைத் துணைவனைத் தெரியாமல் கதையில் அடித்துடலைச் சிதையப் பொடித்து பெருங் சாற்றில் பஞ்சென ஊதினான்-சிலரைத் தேங்காய்க் கீற்றுக் கீற்றாக மோதினான் எண்ணிறந்தோர்கள் கரம்அற்றும் சிரம்அற்றும் உரம்அற்றும் வரும்ரத்தம் கண்டிட மெல்லாம் புரள மண்டை மண்டை ஆய்உருள (அனு) 2. முட்டிவரும் தேரையும் கிட்டிவரும் தேரையும் முடுகிவரும் தேரையும் கடுகிவரும் தேரையும் முன்கையால் வாரித் தூக்கினான்-தறையில்மோதிச் செங்கற் பொடிபோல் ஆக்கினான்-ஆனைப் படையை மொத்தியும் குத்தியும் வாலால் சுற்றியும் எற்றியும் வாரி மூட்டுப் பூச்சிபோல் மடித்துக் கூட்டங் கூட்டமா அடித்து முட்டு முட்டா அடுக்கினான்-கோட்டையும்லங்கைப் பட்டணமும் நடுக்கினான்-அந்நகர்வீதி முகப்பும் கோபுரங்களும் வகுப்பும் தாவரங்களும் முத்துமாடங்களும் தேய்ந்து சித்திர கூடங்களும் சாய்ந்து முடிய வீசி நொறுக்கினான் கோடைக் காலத்தில் இடிபோலவே உருக்கினான்-அடித்தடித்து மூலையும் குதிரைமலர்ச் சோலையும் குதிரைநடைச் சாலையும் குதிரையலை வேலையும் குதிரையாக முறை முறையாச்சாய்ந்து விட்டான்-காலால் எற்றித் தரையிலே தேய்த்து விட்டான்-அரக்கர்தலை மூளையும் சதையும் வண்ணக் காளியும் கூளியும் உண்ண முழுதும் பேய்க்குலம்ஆட கழுகும் காக்கையும் பாட (அனு) |