பக்கம் எண் :

341

அநுபல்லவி

வெற்றிப்பெண் சானகி உறைமரம் ஒன்றும்
விட்டுநீங்கித் திசை எட்டும் ஓங்கி முட்டி      (பற்றி)

சரணங்கள்

1. எடுத்தபொற்கோ              புரங்களும்-மலர்
  படுத்த பூஞ்சப்               பரங்களும்-எரி
  அடுக்களையும்தா             வரங்களும்-சுவர்
  கொடுத்த மணியுத்            தரங்களும்

உன்னதஉப்                   பரிகையும்-தங்கத்தாலே
மின்னிய கொடி                வகையும்-ஆனை சேனை
மன்னும் விமானத்              தொகையும்-நவரத்தினம்
பொன்னறைகளும்              குகையும்-திகுதிகென

     கொண்டல் கொண்டலாப் புகை   ஏறவே-அத்தை
     கண்டவர் சீவன்விட்டு           மாறவே-அவர்
     பெண்டுபிள்ளைகள் பழி         கூறவே-பெண்கள்
     கொண்டைகள் எல்லாம்சுறு       நாறவே

உருவங்கள் தாறுமாறாப் பருவங்கள் வேறுவேறா
அருகெங்கும் கீறுகீறாத் தெருவெங்கும் நீறுநீறாய்         (பற்றி)

2. மூதெயில் வளைந்து          சொலிக்கவே-படும்
  வாதை கண்டமரர்            சலிக்கவே-சொல்லும்
  வேதசாஸ்திரங்கள்            கெலிக்கவே-எங்கள்
  சீதை சொன்னபடி             பலிக்கவே

சாகரங்களும்                   குறைய-புகைப்படலம்
ஆகாயம் மட்டும்               நிறைய-பாதாளத்தில்
நாகரும் கூட                   இறைய-ராவணனும்
மேகதலத்தில்                  மறைய-இலங்கையிலே

     கிணற்று நீரும் சுண்டி       வற்றவே-செத்த
     பிணத்தின் வெடிநாற்றங்கள்  சுற்றவே-வாலை
     வணங்கி எழுந்தெழுந்து     மெத்தவே-செந்
     தணல் பொறியாக அய்யன்   ஏற்றவே

புரவி எல்லாம் உவிய  நிருதாரல்லாம் அவிய      
எரிஎரியாக் கவிய     கரிகரியாக் குவிய          (பற்றி)