342 3. கைக்குழந்தைகளைப் போடுவார்-பெற்ற மக்களை விட்டுவிட டோடுவார்-புகைச் சிக்கினிலே தள்ள மாடுவார்-ஒரு மிக்க அரக்கியர் வாடுவார் மலர்ச்சோலை பொரிந்த தென்பார்-ராவணன் கொலுக் கூடம் எரிந்த தென்பார்-வீட்டின்மேல்வீடா நிலத்தோடே சரிந்த தென்பார்-வெட்டவெளியாத் தலைக்கடை தெரிந்த தென்பார்-தவிதவித்து வேலைக்குள் ஓடிவிழச் சொல்லுவர்-பெண்கள் மூலைக்கு மூலைவாயை மெல்லுவார்-அனல் மேலிட்டி டாமற்குழி கெல்லுவார்-அனுமான் வாலுக்குத் தெண்டனென்று சொல்லுவார் மாடகூடம் அனேக கோடி கோடி நீறாக மேடுமேடாகிப் போகக் காடுகாடாகி வேக (பற்றி) ----- வானர வீரர்கள் திரும்புகாலையில் மதுவனம் அழித்தல் விருத்தம்-29 அக்கினியை இலங்கையில்இவ் வாறிட்டுச் சீதைநிலைஅறிந்து போற்றி மைக்கடல் வாய் மைநாகம் தனைக்கண்டான் சேனைகளை வணங்கிக் கொண்டான் புக்கதுசொல் அனுமானும் அங்கதனும் சேனைகளும் போய்ச் சுக்கிரீவன் தக்கமது வனங்கண்டு நிலைப்பட்டார் மதுவை உண்ணத் தலைப்பட்டாரே தரு-25 அசாவேரி ராகம் அடதாளசாப்பு பல்லவி வானவீரரெல்லாம் பாய்ந்தாரே-மது வனமெல்லாம் கொள்ளையிடடு மேய்ந்தாரே (வான) |