பக்கம் எண் :

343

அநுபல்லவி

வானும் சூரியபக      வானும் தெரியா அந்த
தானத்தினில் மிகுந்த   தேனும் கனியும் சிந்த  (வான)

சரணங்கள்

1. திரளதான மாங்         கனியும்-ஆ
     சினிபழுத்த தேங்     கனியும்-தேன்
  உருகு கதலிப் பூங்       கனியும்-சுவை
     ஒழிபடா விளாங்      கனியும்-கையால்

  திருகித் திருகிப்          பறிக்கத்-திசைதிசை
     பெருகிப் பெருகித்     தெறிக்க-வழிமேல்
  வரும் இளைப்பினால்   வந்தடைக்கவே
  இருவிலாப் புற        மும் புடைக்கவே (வானர)

2. வாயிலே அளிப்பார்      சிலபேர்-தேன்
     வாயிலே தெளிப்பார்   சிலபேர்
  வாயிலே விளிப்பார்       சிலபேர்-கடை
     வாயிலே துளிப்பார்    சிலபேர்

  ஈக்கள் மொய்த்தாற்      போலே-மொய்த்து
     இரைச்ச லிட்டொருக்  காலே-பெரு
  வாயிலே மதுவை வழியக்  குதட்டிக் கொண்டு
  ஓயநின்றவரைஉறுமி      அதட்டிக் கொண்டு (வானர)

3. இந்திரன் வாலிக்கிட்ட     தோட்டம்-இப்ப
     இதிலே சுக்கிரீவர்க்கு   நாட்டம்-என்று
  வந்து புகுந்து கடல்       ஓட்டம்-போலும்
     மதுவை எல்லாம் குடித் தாட்டம்-செய்ய

 அந்தவேளை ததிமுகன்     எதிர்க்க-அவனை
     அடித்தானே அங்கதன்  பதைக்க-சொல்லும்
  எந்தஆணை ஆக்கினைக்கும்   நில்லாமலே
  தந்தம் இச்சையில் தடை       இல்லாமலே     (வானர)