344 சீதையைத் தேடப் போனவர்களைக் குறித்து ஸ்ரீராமர் இரங்கல் விருத்தம்-30 இப்புறம் ராம சாமி தெற்கினில் போன பேரை எப்படிக் காணு வேனே எனக்குறை கூறு வானே திபதை-6 ஆகிரி ராகம் ஆதிதாளம் கண்ணிகள் 1. திக்குத் திக்காச் சீதையைத் தேடி நொந்தாரோ-எந்த திக்குக்களிலும் காணாமல் எங்கே வாடி வந்தாரோ 2. தெற்குத் திசையில் போனோரைக் காணேன் கண்ணாலே-அடா சுக்கிரீவாநான் ஏதுக்கின்னம் இருந்தேன் மண்மேலே 3. கன்னி சீதை இறந்தாளே என்னப் பட்டாரோ-இத்தை என்ன சொல்வோம் என்றுசீவன் தன்னை விட்டாரோ 4. நாள்கணக்கை எண்ணிஎண்ணி ஏக்கம் ஆனோரோ-உன்தன் ஆக்கினைக்குப் பயந்துதவசு நோக்கிப் போனாரோ 5. மற்றொரு லோகத்தைச் சுற்றித் தேடு கின்றாரோ-சிறையில் வைத்த அரக்கரோ டேபோர் ஆடு கின்றாரோ 6. தென்முகமே முகமாக இன்னம் செல்வாரோ இங்கே என்முகத்தில் சீதை சேதிஎன்ன சொல்வாரோ 7. தன்வரவு பார்க்கும் என்னைத்தளரப் பார்ப்பானோ-அனுமான் என்வயிற்றில் என்றுவந்து பாலை வார்ப்பானோ 8. கவலைஏன் அனுமனிருக்கக் காரியம் போகுமோ-அய்யோ அவனா லாகாத காரியம்பின் ஆரால் ஆகுமோ |