347 2. மடித்து வாயிதழ் கடித்தான்-மேனி மயிர்ப் புளகம் பொடித்தான்-வேர்வை பொடிக்கத்துடி துடித்தான்-அனுமான் புத்தி சொல்லிப் படித்தான்-சேனையை போர்க்குச் செல்லும் என்றான்-அடிக்கடி சேர்க்கச் சொல்லும் என்றான்-இப்படி (சூடா) 3. அரக்கராம் இருளெல்லாம் ஓடவே-தர்மம் ஆனபயிர் வளர்ந்து கூடவே-கீர்த்தி விரித்தரம்பையர் கீதம் பாடவே-தேவர் வீசும் பூமலர் எங்கும் மூடவே-வரவர மேனிபூ ரிக்கவே-துர்க்காப வானிபூ ரிக்கவே-அந்த (சூடா) ------ ஸ்ரீராமர் தென்சமுத்திரக் கரையைக் காணுதல் விருத்தம்-32 இந்தவண்ணம் சாமிமனம் மகிழ்ந்து தேறி இலங்கையைப் போய் வளைத்திடவே சேனைசூழ அந்த அனுமான் மேலேதானும், தம்பி அங்கதன்தோள் மேலும் எழுந்தருளிச் சென்று தொந்தமுள்ள படைத்தலைவர் முன்னும் பின்னும் சூழ்ந்துவரச் சுக்கிரீவன் அருகேநின்று முந்திவழி காட்டியிட ராமச்சந்திரன் முறைகொண்டான் தென்கடலின் கறைகண்டானே ----- சுந்தரகாண்டம் முற்றிற்று விருத்தம்-32. கொச்சகம்-3. திபதைகள்-6. தருக்கள்-27 சக்கிரவர்த்தித் திருமகனார் திருவடிகளே சரணம். |