353 தூயமாளிகை நெடுந்தெருத் துரூவிப்போய் தொலைவில் மூன்றுலகிற்கும் நாயகன் பெருங் கோயிலை நண்ணுவான் கண்டனன் நளிர்திங்கள் மாயநந்திய வாள்முகத் தொருதனி மயன்மகள் உறை மாடம் இன்ன தன்மையின் எழில்மணி விளக்கங்கள் எழில்கெடப் பொலிகின்ற தன்ன தின்னொளி தழைப்புறத் துயில்வுறு தைய லைத் தகைவில்லான் அன்னளாகிய சானகி இவள்என அயிர்த்து அகத்தெழு வெந்நீதீ துன்னும் ஆருயிர் உடலொடு சுடுவதுஓர் துயருழந்திவை சொன்னான் மானுயர்த் திருவடிவினள் அவள், இவள் மாறுகொண்டனள் கூறின் தானியக்கியோ தானவர் தையலோ ஐயுறுந்தகையானாள் கானுயர்த்த தார் இராமன் மேல்நோக்கிய காதல் காரிகையார்க்கு மீனுயர்த்தவன் மருங்குதான் மீளுமோ நினைந்தது மிகை என்றான் குழவி ஞாயிறு குன்றிவர்ந்த தனையன குருமணி நெடுமோலி இழைகளோடு நின்றிள வெயில் ஏறித்திட இரவெனும் பெயர் வீய முழைகொள் மேருவின் முகட்டிடைக் கனகனை முறுக்கிய முரண்சீயம் தழைகொள் தோளொடு தலைபல பரப்பிமுன் துயில்வதோர் தகையானை கண்டனன் காண்டலோடும் கருத்தின்முன் காலச்செந்தீ விண்டன கண்கள் கீண்டு வெடித்தன கீழும் மேலும் |