பக்கம் எண் :

355

ஒன்றானும் உணரகிலேன் மீண்டினிப்போய் என்னுரைக்கேன்
பொன்றாத பொழுதெனக்கிக் கொடுந்துயரம் போகாதால்

கண்டுவரும் என்நிருக்கும் காகுத்தன் கவிகுலக்கோன்
கொண்டுவரும் என்றிருக்கும் யானிழைத்த கோளிதுவால்
புண்டரிக நயனத்தான் பாலினியான் போவேனோ
விண்டவரோடு உடன்வீயாது யான்வாளா விளிவேனோ

கண்ணியநாள் கழிந்துளவால் கண்டிலமால் கனங்குழையை
விண்ணடைதும் என்றாரை ஆண்டிறுத்தி விரைந்தயான்
எண்ணியது முடிக்கிலேன் யான்முடியா திருப்பேனோ
புண்ணியம் என்றொருபொருள் என்உழைநின்றும் போயதால்

ஏழுநூறு ஓசனைசூழ்ந்து எயில்கிடந்த இவ்இலங்கை
வாழுமா மன்னுயிர் யான்காணாத மற்றில்லை
ஊழியான் பெருந்தேவி ஒருத்தியுமே யான்காணேன்
ஆழிதாய் இடராழி இடையேவீழ்ந்து அழிவேனோ

வல்லரக்கன் தனைப்பற்றி வாயாரக் குருதியுகக்
கல்லரக்கும் கரதலத்தால் காட்டென்று காண்கேனோ
எல்லரக்கும் அயில்நுதிவேல் இராவணனும் இவ்வீரும்
மெல்லரக்கின் உருகிஉக வெந்தழலான் வேய்கேனோ

வடித்தாய்பூங் குழலாளை வானறிய மண்ணறிய
பிடித்தான் இவ்அடலரக்கன் எனும்மாற்றம் பிழையாதால்
எடுத்தாழி இலங்கையினை இருங்கடலிட் டின்றிவனை
முடித்தாலே யான்முடிதல் முறைமன்ற என்றுணர்வான்
                   (ஊர்தேடுபடலம் 220, 221, 223, 228, 231)

அனுமார் சீதையைக் காணுதல்

விருத்தம்-6 - தரு-5

மாடுநின்ற அம்மணிமலர்ச் சோலையை மருவி
தேடிஇவ்வழிக் காண்பனேல் தீரும் என்சிறுமை
ஊடுகண்டிலேன் எனின் பின்னர் உரியதொன்றில்லை
வீடுவேன் மற்றிவ் விலங்கல்மேல் இலங்கையைவீட்டி

அவ்வயின் அரக்கியர் அறிவுற் றம்மவோ
செவ்வையில் துயில்நமைச் செகுத்ததீதென