358 மெய்திருப்பதம் மேத்வென்ற போதினும் இத்திருத்துறந் தேகுஎன்ற போதினும் சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரை ஒத்திருக்கும் முகத்தினை உன்னுவாள் தேங்கு கங்கைத் திருமுடிச் செங்கணான் வாங்குகோல வடவரை வார்சிலை ஏங்கு மாத்திரத் திற்றிரண்டாய்விழ வீங்கு தோளை நினைந்து மெலிந்துனாள் இன்னல் அம்பர வேந்தற்கியற்றிய பன்னலம் பதினாலாயிரம் படை கன்னல் மூன்றில் களப்படக் கால்வளை வில்நலம் புகழ்ந்து ஏங்கி வெதும்புவாள் ஆழநீர்க் கங்கை அம்பி கடாவிய ஏழை வேடனுக் கெம்பிநின்தம்பி நீ தோழன் மங்கை கொழுந்தி எனச்சொன்ன வாழி நண்பினை உன்னி மயங்குவாள் உரங்கொள் தேமலர்ச் சென்னி உரிமைசால் வரங்கொள் பொன்முடி தம்பி வனைந்திலன் திரங்கு செஞ்சடை கட்டிய செய்வினைக்கு இரங்கி ஏங்கியது எண்ணி இரங்குவாள் பரித்த செல்வம் ஒழியப் படரும் நாள் அருத்தி வேதியற்கு ஆன்குலம் ஈந்தவன் கருத்தின் ஆசை கரையின்மை கண்டிறை சிரித்த செய்கை நினைந்தழும் செய்கையால் மழுவின் வாளினன் மன்னரை மூவெழு பொழுதின் நூறிப் புலவுறு புண்ணின்நீர் முழுகினான்தவ மொய்ம்பொடு மூரிவில் தழுவும் மேன்மை நினைந்துயிர் சாம்புவாள் ஏகவாளி அவ்இந்திரன் செம்மல் மேல் போகஏவி அதுகண்பொடித்த நாள் காகம் முற்றும் ஓர்கண்ணல வாகிய வேக வென்றியைத் தன்தலைமேற் கொள்வாள் |