361 மன்னவன் தேவிஅம்மயன் மடந்தைதன் பின்னவிழ் ஓதியும் பிறங்கி வீழ்ந்தன துன்னரும் சுடர்சுடச் சுறுக்கென்று ஏறிற்றால் இன்னல் உண்டு எனுமிதற் ஏது என்பதே என்றனள் இயம்பிவேறு இன்னும் கேட்டியால் இன்றிவண் இப்பொழுது இறையந்ததோர் கனா வன்றுணைக் கோளரி இரண்டு மாறிலாக் குன்றிடை உழுவையம் குழுக்கொண்டீண்டியே உரம்பொரு மதகரி உறையும் அவ்வனம் நிரம்புற வளைந்தன நெருக்கி நேர்ந்தன வரம்பறு பிணம்படக் கொன்று மாறிலாப் புரம்புக இருந்ததோர் மயிலும் போயதால் ஆயிரம் திருவிளக் கமைய மாட்டிய சேயொளி விளக்கமொன் றேந்திச் செய்யவள் நாயகன் திருமனைநின்று நண்ணுதல் மேயினள் வீடணன் கோயில் மென்சொலாய் பொன்மனை புக்கஅப் பொருவில் போதினில் என்னைநீ உணர்த்தினை முடிந்ததில் என அன்னையே அதன்குறை காண்என் றாயிழை இன்னமும் துயில்கென இருகை கூப்பினாள் (காட்சிப்படலம் 39-53) சீதாதேவிபக்கல் இராவணன் குறையிரத்தல் விருத்தம்-8 - திபதை-3 என்றிவை இனையன எண்ணி வண்ணவான் பொன்திணி நெடுமரப்பொதும்பர் புக்குஅவண் நின்றனன் அவ்வழி நிகழ்ந்தது என்எனின் துன்றுபூஞ் சோலைவாய் அரக்கன் தோன்றினான் தந்திரி நெறியில் தாக்குறு கருவி தூக்கினர் எழுவிதச் சுதியின் முந்துறு குணிலொடு இயைவுறு குறட்டில் சில்லரிப் பாண்டிலில் முறையின் |