பக்கம் எண் :

363

பொருளும் யாழும் விளரியும் பூவையும்
மருள நாளும் மழலை வழங்குவாய்
தெருளும் நான்முகன் செய்தது உன்சிந்தையின்
அருளும் மின் மருங்கும் அரிதாக்கியோ

ஈண்டுநாளும் இளமையும் மீண்டில
மாண்டு மாண்டு பிறிதுறும் மாலைய
வேண்டுநாள் வெறிதே விளிந்தால்இனி
யாண்டு வாழ்வது இடருழந்து ஆழ்தியோ

இழவெனக்கு உயிர்க்கு எய்தினும் எய்துக
குழைமுகத்துநின் சிந்தனை கோடினால்
பழகநிற்புறும் பண்பிவை காமத்தோடு
அழகினுக்கு இனியாருளர் ஆவரே

தேவர் தேவியர் சேவடிகை தொழும்
தாவில் மூவுலகின் தனிநாயகம்
மேவுகின்றது நுங்கண் விலக்கினை
ஏவர் ஏழையர் நின்னின் இலங்கிழாய்

குடிமை மூன்றுலகும் செய்யும் கொற்றத்துஎன்
அடிமை கோடி அருளுதியால் எனா
முடியின்மீது முகிழ்த்துயர் கையினன்
படியின் மேல்விழுந்தான் பழிபார்க்கலான்
                 (காட்சிப்படலம் 73, 86, 94, 97, 99, 105, 109, 110)

சீதாதேவி இராவணனை இடித்தல்

விருத்தம்-9-தரு-7

காய்ந்தன சலாகையன்ன உரைவந்து கதுவாமுன்னர்
தீய்ந்தன செவிகள் உள்ளம்திரிந்தது சிவந்தசோரி
பாய்ந்தன கண்கள் ஒன்றும் பரிந்திலள் உயிர்க்கும் பெண்மைக்கு
ஏய்ந்தன அல்லவெய்ய மாற்றங்கள் இனையசொன்னாள்

மேருவை உருவல்வேண்டின் விண்பிளந்து ஏகல் வேண்டின்
ஈரெழு புவனம்யாவும் முற்றுவித்திடுதல் வேண்டின்
ஆரியன் பகழிவல்லது அறிந்திருந்து அறிவிலாதாய்
சீரியஅல்ல சொல்லித் தலைபத்தும் சிந்துவாயோ