பக்கம் எண் :

364

அஞ்சினை ஆதலான் அன்றுஆரியன் அற்றம் நோக்கி
வஞ்சனை மானொன்றேவி மாயையால் மறைந்து வந்தாய்
உஞ்சனை போதியாயின் விடுதியுன்குலத் துக்கெல்லாம்
நஞ்சினை எதிர்ந்தபோது நோக்குமே நினது நாட்டம்

பத்துளதலையும் தோளும் பலபல பகழிதூவி
வித்தகவில்லி னாற்குதிரு விளையாடற்கு ஏற்ற
சித்திர இலக்கமாகும் அல்லது செருவில் ஏற்கும்
சத்தியைப் போலும் மேனாள் சடாயுவால் தரையில் வீழ்ந்தாய்

தோற்றனை பறவைக்கன்று துள்ளுநீர் வெள்ளம் சென்னி
ஏற்றவன் வாளால் வென்றாய் அன்றெனின்இறத்தி யன்றே
நோற்ற நோன்புடைய வாழ்நாள் வரமிவை நுனித்தவெல்லாம்
கூற்றினுக் கன்றேவீரன் சரத்திற்கும் குறித்ததுண்டோ

பெற்றுடை வாளும் நாளும் பிறந்துடை வரனும் பின்னும்
மற்றுடை எவையும்தந்த மலரயன் முதலோர் வார்த்தை
விற்றொடை இராமன்கோத்து விடுதலும் விலக்குண்டெல்லாம்
இற்றிடைந் திறுதல் மெய்யே விளக்கின்முன் இருளுண்டாமோ

குன்றுநீ எடுத்தநாள்தன் சேவடிக் கொழுந்தால் உன்னை
வென்றவன் புரங்கள் வேவத்தனிசரம் துரந்தமேரு
என்றுணைக் கணவன் ஆற்றற்கு உரணிலாதிற்று வீழ்ந்த
அன்றெழுந் துயர்ந்தஓசை கேட்டிலை போலும் அம்மா

மலைஎடுத் தெண்டிசை காக்கும் மாக்களை
நிலை கெடுத்தேன் எனும் மாற்றம் நேரும்நீ
சிலைஎடுத் திளையவன் நிற்கச் சேர்ந்திலை
தலைஎடுத் தின்னமும் மகளிர்த் தாழ்தியோ

ஏழைநின் ஒளித்துரை இன்னதாம் என
வாழிஎங் கோமகன் அறிய வந்தநாள்
ஆழியும் இலங்கையும் அழியத் தாழுமோ
ஊழியும் திரியும் உன்னுயிரொடு ஓயுமோ

வெஞ்சின அரக்கரை வீய்த்து வீயுமோ
வஞ்சனை நீசெய வள்ளல் சீற்றத்தால்
எஞ்சலில் உலகெலாம் எஞ்சும் எஞ்சுமென்று
அஞ்சுகின் றேனிதற்கு அறனும் சான்றரோ