373 அயர்வுற்று அரிதின் தெளிந்து அம்மலைக் கப்புறத்தோர் உயர்பொன்கிரி உற்றுளன் வாலிஎன்று ஓங்கல் ஒப்பாள் துயர்வுற்றவ் இராவணன் வாலிடைப் பண்டுதூங்க மயர்வுற்ற பொருப்பொடு மால்கடல் தாவிவந்தான் ஆயானைஓர் அம்பினால் ஆருயிர் வாங்கி அன்பின் தூயான் வயின் அவ்வரசு ஈந்தவன் சுற்றுசேனை பேயாய் வருவாய் எனவிட்டனன் மேவுகாறும் ஏயான் இருந்தான் இடைத்திங்கள் இரண்டிரண்டும் பின்கூடியசேனை பெருந்திசை பின்னவாக விற்கூடு நுதல்திரு நின்னிடை மேவஏவித் தெற்கூடுருவக் கடிதுஏவினன் சேர்ந்தது என்ன முற்கூடிய கூறினன் காலம்ஓர் மூன்றும்வல்லான் சுட்டினன் நின்றனன் தொழுதகையினன் விட்டுயர் தோளினன் விசும்பின் மேக்குயர் எட்டரு நெடுமுகடெய்த நீளுமேல் முட்டும் என்றுருவொடு வளைந்த மூர்த்தியான் முழுவதும் இவ்வுருக் காணமுற்றிய குழுவிலது உலகுஇனிக் குறுகுவாய் என்றாள் எழுவினும் எழில்இலங்கு இராமன் தோள்களைத் தழுவின ளாம்எனத் தளிர்க்கும் சிந்தையாள் ஆண்டகை அனுமனும் அருளதாம் எனா மீண்டனன் விசும்பெனும் பதத்தை மீச்செல்வான் காண்டலுக் கெளியதோர் உருவு காட்டினான் தூண்டலில் விளக்கனாள் இனைய சொல்லினாள் (உருக்காட்டுப்படலம் 74-78, 81, 82, 84, 85, 90, 92-94, 99, 107, 108) அனுமார் சீதாதேவியை வரங்கேட்குதல் விருத்தம்-14 கேட்டியடியேனுரை முனிந்தருளல்; கேளான் வீட்டியிடுமேல் அவனை வேறல் வினையன்றால் ஈட்டிஇனி என்பல இராமன் எதிர் நின்னைக் காட்டி அடிதாழ்வென் அதுகாண்டி இதுகாலம் |