376 சொல்லி னாற்சுடுவேன் அது தூயவன் வில்லின் ஆற்றற்கு மாசென்று வீசினேன் வேறும் உண்டுஉரை கேளதுமெய்ம் மையோய் ஏறுசேவகன் மேனியல்லால் இடை ஆறும் ஐம்பொறி நின்னையும் ஆண்எனக் கூறும் இவ்வுருத் தீண்டுதல் கூடுமோ தீண்டினான் எனின்இத்தனைச் சேண்பகல் ஈண்டுமோ உயிர்மெய்யின் இமைப்பின்முன் மாண்டு தீர்வென் என்றே நிலம்வன் கையால் கீண்டு கொண்டெழுந் தேகினான் கீழ்மையான் மேவுசிந்தையில் மாதரைமெய் தொடின் தேவு வன்தலை சிந்துகநீ எனப் பூவில்வந்த புராதனனே புகல் சாவம் உண்டென தாருயிர் தந்ததால் அன்ன சாவம் உளதென ஆண்மையான் மின்னும் மோலியன் மெய்ம்மையன் வீடணன் கன்னி என்வயின் வைத்த கருணையான் சென்னதுண்டு துணுக்கம் அகற்றுவான் ஆயதுண்மையின் யானும் அதன்றெனின் மாய்வென் மன்ற அறம்வழுவா தென்றும் நாயகன்வலி எண்ணியும் நான்உடைத் தூய்மையும் காட்டவும் இத்துணை தூங்கினேன் ஆண்டுநின்றும் அரக்கன் அகழ்ந்து கொண்டு ஈண்டு வைத்தது இளவல் இயற்றிய நீண்ட சாலையொடு நிலைநின்றது காண்டி ஐயநின் மெய்யுணர் கண்களால் தீர்விலேன் இதுஒருப கலும்சிலை வீரன் மேனியை மானும் இவ்வீங்குநீர் நார நாள்மலர்ப் பொய்கையை நண்ணுவேன் சோரும் ஆருயிர் காக்கும் துணிவினால் |