392 எனையவர் எனையவர் யாவர் யாவையும் நினைவரும் அருவினை முடிக்க நின்றுளோன் மூலமும் நடுவும்ஈறும் இல்லதோர் மும்மைத்தாய காலமும் கணக்கும்நீத்த காரணன் கைவில்ஏந்தி சூலமும்திகிரி சங்கும் கரகமும் துறந்து தொல்லை ஆலமும் மலரும் வெற்றிப்பொருப்பும் விட்டுஅயோத்தி வந்தான் அன்னவற் கடிமைசெய்வேன் நாமமும் அனுமன் என்பேன் நன்னுதல் தன்னைத்தேடி நாற்பெருந்திசையும் போந்த மன்னரில் தென்பால்வந்த தானைக்கு மன்னன் வாலி தன்மகன் அவன்தன்தூதன் வந்தனென் தமியேன் என்றான் அஞ்சலை அரக்க பார்விட்டந்தரம் அடைந்தான் அன்றே வெஞ்சினவாலி மீளான் வாலும்போய் விளிந்ததன்றே அஞ்சன மேனியான்தன் அடுகணை ஒன்றால் மாழ்கித் துஞ்சினன் எங்கள் வேந்தன்சூரியன் தோன்றல் என்றான் தரு-21 தூது வந்தது சூரியன் கால்முனை ஏது ஒன்றியநீதி இயைந்தன சாது என்றுணர் கிற்றியேல் தக்கன கோது இறந்தன நின்வயிற் கூறுவாம் போய்இற்றீர் நும்புலன் வென்று போற்றிய வாயில் தீர்வரிதாகிய மாதவம் காயின் தீர்வருங்கேடு அருங்கற்பினாள் தீயின் தூயவளைத் துயர் செய்ததால் திறம் திறம்பிய காமச் செருக்கினால் மறந்து தத்தம் மதியின் மயங்கினார் இறந்து இறந்து இழிந்து ஏறுவதேயலால் அறம்திறம்பினர் யாருளர் ஆயினார் இச்சை தன்மையினில் பிறர்இல்லினை நச்சி நாளும் நகையுற நாணிலன்
|