400 அண்டர் நாயக இனித் துறத்தி ஐயமும் பண்டுள துயரும் என்று அனுமன் பன்னுவான் உன்பெருந்தேவி என்னும் உரிமைக்கும் உன்னைப் பெற்ற மன்பெரு மருகி என்னும் வாய்மைக்கும் மிதிலைமன்னன் தள்பெருந்தனயை என்னும் தகைமைக்கும் தலைமை சான்றான் என்பெருந் தெய்வம் ஐயா இன்னமும் கேட்டி என்பான் உன்குலம் உன்னதாக்கி உயர்புகழ்க் கொருத்தியாய தன்குலம் தன்னதாக்கித் தன்னைஇத் தனிமை செய்தான் வன்குலம் கூற்றுக் கீந்து வானவர் குலத்தை வாழ்வித்து என்குலம் எனக்குத்தந்தாள் என்இனிச் செய்வதெம் மோய் விற்பெருந் தடந்தோள் வீர வீங்குநீர் இலங்கை வெற்பில் நற்பெருந் தவந்தளாய நங்கையைக் கண்டேன் அல்லேன் இற்பிறப் பென்பதொன்றும் இரும்பொறை என்பதொன்றும் கற்பெனும் பெயரதொன்றும் களிநடம் புரியக்கண்டேன் கண்ணினும் உளைநீ தையல் கருத்தினும் உளைநீ வாயின் எண்ணினும் உளைநீ கொங்கை இணைக்குவை தன்னின் ஓவாது அண்ணல் வெங்காமன் எய்த அலரம்பு தொளைத்த ஆறாப் புண்ணினும் உளை நீ நின்னைப் பிரிந்தமை பொருந்திற்றாமோ வேலையுள் இலங்கை என்னும் விரிநகர் ஒருசார் விண்தோய் காலையும் மாலைதானும் இல்லதோர் கனகக் கற்பச் சோலையங் கதனில் உம்பி புல்லினால் தொடுத்த தூய சாலையில் இருந்தாள் ஐய தவம் செய்த தவமாம் தையல் தையலை வணங்கற் கொத்த இடைபெறும் தன்னை நோக்கி ஐய, யான்இருந்த காலை அலங்கல் வேல்இலங்கை வேந்தன் எய்தினன் இரந்துகூறி இறைஞ்சினன் இருந்தநங்கை வெய்துரை சொல்லச் சீறிக்கோறல் மேற்கொண்டு விட்டான் ஆயிடை அணங்கின் கற்பும் ஐயநின் அருளும்செய்ய தூயநல் லறனும் என்றிங்கினையன தொடர்ந்து காப்ப போயினன் அரக்கிமாரைச் சொல்லுமின் பொதுவின் என்றாங் கேயினன் அவரெலாம் என்மந்திரத் துறங்கி யிற்றார் |