404 7. நரரையும் வானரரையும் கொல்ல நானல்லோ அனுபந்தன் துரிதமாஎன்னைப் போகச்சொல்என்று சொன்னானே வச்சிரதந்தன் 8. இவன்மனிதருக்கிவன் குரங்குக்கென்று ஏவினான் என்கோனே அவனவன்பலந் தெரியலாகும் என்றான் மகோதரன்தானே 9. நாமேதின்கின்ற நரரும் குரங்கும் நம்மை எதிர்க்க ஆச்சே மாமோசம் இதுவென்று துன்முகன் வகுத்தானே தன்பேச்சே 10. முட்டனுக்குத் தன்புத்தி நூலிலும் முற்றிலும் செம்மை போலே துட்ட மந்திரிகள் வாயில்வந்தது சொன்னாரே ஒருக்காலே 11. சூரியகேது பிசாசன் முதலோர் சொல்லிடும் அந்தவேளை காலியமல்ல வென்றுறுக் கினான்கும்ப கர்னனெனும் அக்காளை ----- கும்பகர்ணன் ராவணனுக்கு ஆலோசனை கூறல் விருத்தம்-2 படபடென மந்திரிகள் இந்தவிதம் சொன்னதெல்லாம் பரிந்து கேட்டே உடல்மறந்தே ராவணனும் சிறியார்கைச் செம்பொன்போல் உற்சா கத்தால் கடல்கடந்து போராட நினைந்தளவில் அமைச்சர்களைக் காய்ந்து பின்பு திடமுடைய கும்பகர்ணன் கூறுவான் அண்ணன் முன்னே சீறுவானே தரு-1 கல்யாணிராகம் ஆதிதாளம் பல்லவி நேத்தியிது நேத்தியடா அண்ணேன்-மந்திரா லோசனை நேத்தியிது நேத்தியடா அண்ணேன் (நேத்) |