பக்கம் எண் :

407

     எடுத்தாய்-ஆசை     தொடுத்தாய்-நன்மை
     விடுத்தாய்-குடி       கெடுத்தாய்-அவள் ஒரு
     தாய்அடா           தாய்அடா-நமக்கொரு
     தீஅடா             தீஅடா-சிறைமேல்

  எத்தாய் வைத்தாய்       பித்தா செத்தாய்
  சனகிஅல்ல உனையே     கொல்ல வந்தவள்          (ராக)

3. மேதகுகார்த்த வீரியன்முன் எதிரிட்டாய்-விருதுவிட்டாய்
  வேதவதி சொன்ன சாபத்தில் அகப்பட்டாய்-பிழைக்க ஒட்டாய்

     மதமோ உனக்கு அதமோ-எந்த
     விதமோ லங்கை சதமோ-இத்தனை
     சூரரும் வீரரும் உனதுகு
     மாரரும் பேரரும் உன்னுடைய

  முடியும் கொடியும் நொடியும் மடியும்முன்
  சீதைபேர வாதைதீரும் -உள்ளது                      (ராக)

-----

விபீஷணரை ராவணன் சீறிக்கூறல்

விருத்தம்-4

உதிக்கின்ற கதிரோன் முன்னே ஒளிக்கும் மின்மினியோ லல்லால்
கொதிக்கின்ற என்முன் அந்தக் குரங்கொடு நரர்என் செய்வார்
எதிர்க்கின்ற சொல்என் சொன்னாய் எனவிபீஷணனை பார்த்துக்
கதிக்கின்ற அரக்கன் பல்லைக் கடிக்கின்றான் படிக்கின்றானே

தரு-3

கௌளிபந்துராகம்                         ஆதிதாளம்

பல்லவி

போதும் போதும் இந்த புத்திவிபீஷணர்
போதும் போதும் சொன்னது போதுமடா           (போது)

அநுபல்லவி

ஏதடா நான்பயப்      பட்டு               நடுக்குமோ
     எலியைக் கண்டுபூனை  ஏங்கிக்        கிடக்குமோ
நாதன் ஆனநானோ உன்சொல்லைக்         கேட்பது
  நரிவாலைக் கொண்டோ கடல்ஆழம்       பார்ப்பது (போ)