பக்கம் எண் :

409

ஒன்றுமே பிசகாதென் றெழுந் தவ்வூரை
     ஒழிந்து வானரச்சேனைக் கொழுந்தின் முன்னே
சென்றுரா கவசரணம் என்ற வார்த்தை
     சீராமன் கேட்க மயிந்தனும்போய்ச் சொன்னான்
அன்று ராகவன்பலர் யோசனையும் கண்டான்
     அதுபோதில் அனுமந்தன் இதுசொல் வானே

தரு-4

உசேனிராகம்                             ஆதிதாளம்

பல்லவி

இந்தவி பீஷணன் மீது-நமக்கு                  
இத்தனை யோசனைஏது                             (இந்த)

அநுபல்லவி

அந்தஇலங்கையிலே அறிந்தேன் இவனை முன்னே
சந்தேகம் இல்லைசாமி தாசன் அனுமான் சொன்னேன்          (இந்த)

சரணங்கள்

1. சொல்லும் புராண வேத             சாத்திரம்-இவன்
     செய்வது தேவதா               தோத்திரம் பல
  கல்வி கேள்விக்கெல்லாம்            பாத்திரம்-கள்ளம்
     கபடமறியான் அணு             மாத்திரம்-இது
  அல்லாமல் அவன் வீட்டில் அடுத்தபோதில் அனேகம்
  நல்லநல்ல சகுனம் நான்கண்டேன் அனுபோகம்        (இந்த)

2. ஊத்தையான அள்ளும்             கள்ளும்-இவன்
     உண்கின்றான் என்பதைத்        தள்ளும்-கண்டால்
  ஏற்றவன் என்றுநீர்                 கொள்ளும்-நல்ல
     இங்கிதவான் எவர்க்             குள்ளும்-இவன்
  நேற்று ராவணன் என்மேல் நீட்டிய கத்தி வெட்டை
  தீர்த்து விட்டே எனக்குச் செய்தான் பிராணபிரதிஷ்டை  (இந்த)

3. மூவர்க்கும் கூடாத                வெற்றி-கூட
     முடிப்பதல்லோ உன்தன்         சத்தி-சிறு
  கூவத்தைக் கண்டுகடல்             ஒற்றிப்-போன
     கொள்கை போலாச்சே இந்தப்    பெற்றி-சாமி