பக்கம் எண் :

559

3. தேவர் மடந்தையர்  சோபனங்கள்         பாட
     சீதை மனத்தில்  நினைந்ததுகை        கூட
  தூவும் மலர்க்கை    முனிவர்கள்கூத்       தாட
     சூரியன் தேர்ஓட்ட லங்கைமேற்கண்     போட

  யாவரும்      கண்கண்டு      தேறவும்
  பாவிகள்      சந்தங்கள்       மாறவும்
  தேவருக்      கானந்தம்       ஊறவும்
  ராவணன்     வைகுந்தம்      ஏறவும்    (தேர்)

-----

மகோதரன் வதை

விருத்தம்-96

திருத்தேர்ஏறி ராகவனும் சென்றான் போர்க்கும கோதரனும்
தரிக்கா தெழுந்து ராவணன்பால் சார்ந்து போர்க்கு விடைகொடெனச்
செருத்தான் செய்து லட்சுமணனை செயித்து வாவென்ற னுப்பவந்து
கருத்தா வானராகவனைக் கடிந்தான் அவனால் மடிந்தானே

தரு-79

சாவேரிராகம்                             அடதாளசாப்பு

பல்லவி

மடிந்தானே மகோதரன்-ராமன்கை அம்பால்
படிந்தானே மண்மேல்                             (மடி)

அநுபல்லவி

கடிந்து ராவணனால் லட்சு   மணன்மீது விடப்பட்டு
கடுகிஓடியவன்             மீதிற்போரினை விட்டு
தொடர்ந்து ராமன்மீத       னேகசரங்கள் தொட்டு
  சூதும்வாதும் சுவாமி      தொடுங்கணையாற் கெட்டு (மடி)

சரணங்கள்

1. அனுகூலச் சத்துராதி ஆகியிருந்துரா
     வணன் குடியினைக்        கெடுத்து-தன்னுடைய
  அகத்தில் எண்ணமெல்லாம்     முடித்து-லங்கையின்மேலே
     ஆசையினையும்           விடுத்து-இணையில்லாரா