பக்கம் எண் :

562

  அரக்கன் நூறுநூறா       யிரமம்பு       தூற்றினான்
     அதைக்கண்டே ராமன் நொடியொன்றில் மாற்றினான்

அரக்கன் ஆயிரமாயிரம்     ஆயுதம்         தொட்டான்
     அதைக்கண்டே ராமன் தூளிகள் தூளிகள் இட்டான்
அரக்கன் தேரைஆ         காசத்திற்        போக்கினான்
     அதுக்கும் சாமிதேர்    மேலாகத்        தூக்கினான்

ஆதிநெடுஞ் சேஷனும்பட்சீ      சனம்பொற்றூ    ணிடத்தேகன
     காசுரனும் சிங்கமும்தப்பா   தடுத்துப்போர்   தொடுத்தால்என
ஆனதுரங்கம் திருப்பிக்கோல்     பிடித்துத்தேர்   விடுத்தேவரும்
     மாதலிசங்கம் தொனிக்கச்சே பயப்பட்டார்    முடித்தேவரும்

அக்கணம் இருதேரும்      தடந்தத்தும்     நிலந்தத்தும்
திக்குத்திசை களும்போய்   இடஞ்சுற்றும்    வலம்சுற்றும்
அப்புறம் மலைதாவும்      அலைதாவும்    கடல்தாவும்
இப்புறம் செவிதாவும்       புவிதாவும்      கெவிதாவும்

அன்றுமுனிவர்       பயந்து         கடகட
என்றுபதறி          நடுங்கி         விடவிட
அண்டமுகடு        பிளந்து         நிலைகெட
மண்டலமும்மிசை    விண்டு         தலைகெட

அதிர மலைகளும்    அதிரநிலைகளும்
அதிரவெகுதிசை      அதிரமலையிடி
அதிரஉத்திகள்       அதிரமதிகதிர்
அதிரஉடுவினம்      அதிரஇப்படி         (ராக)

2. வட திசைமுதல்    நாலு திசையும்        போவார்
  கடலிலும் போவார்  கடல் அப்புறமும்     போவார்
  மனது வேகமோ    வாயு வேகமோ       என்ன
  கனக லோகமோ    கீழ் உலகமோ        என்ன

  வருவர் ஓடுவர்     கூடு வர்இரு         தேரும்
  பொருவர் சேருவர்  நேருவர்இதை        ஆரும்
  வசன மாகஉரை    யார்சொல் வாரொருக்  காலே
  குசவ னானவன்    விடுதிகிரியைப்        போலே