பக்கம் எண் :

563

மாரிவழங்கும் பிரசண்டக்கொண் டலைப்போல இடித்தார் பலர்
  தீவும் விசும்பும் குலுங்கச்செஞ் சாக்காடா முடித்தார்சிலர்
மாதலி அங்கம் தொலைத்துப்பாய் பரிக்குக்கோல் விடுத்தான்ஒரு
  சாமிநெடுந்தேர் மறைத்தங்கே துசத்தைக்கீழ்ப் படுத்தான் அவன்

வளையராகவன் தேரை          நிருதன்    மூட      லாலே
இளையவன் முதலானோர்        களையானார்அதன்    மேலே
மணவாள ராகவன்              பனிபோல ஒத்       தானே
கணையெல்லாம் அறுத்தவன்      கொடியையும்அறுத்   தானே

மால்ஒத்தவன் படை       மாரி      பெய்திட
சூலப்படை கொடு         சுவாமி    கொய்திட
வன்னி வாளியை          அவன்    விடுத்திட
அன்னதே கொடு          சாமி      தடுத்திட

மாமயன் படை            அரக்கன்   தொடுக்கவும்
சாமிகந்தரு               வஸ்திரம்  எடுக்கவும்
நாக லோகமும்            புவியும்    பொடிப்பொடி
ஆகவே கள              மீதில்     அடிக்கடி   (ராக)

3. சாமிமேல் ஒரு     தெண்டவன்     விடுத்திட
  சாமி ஓரம்பு        கொண்டதைத்   தடுத்திட
  சாமிமேல் அவன்    மாயாஸ்        திரம்போட
  சாமிதான் ஞானாஸ்  திரந்தொடுத்     ததைச்சாட

  சாமிமேல் சூலம்    அவன்விடச்      சினங்கொண்டு
  சாமி ஓங்காரம்     செய்தது         விழக்கண்டு
  சாமிமூவரும்       இவனென்னும்    விவகாரம்
  தம்பி சொன்னதை   நினைந்தெண்ண  அந்நேரம்

தாகருடன் செஞ்சரத்தைக் கைப்பிடித்துச் சாமிதொட்டே அவன்
  நாகமெனும் செஞ்சரத்தைக் கொத்தவிட்டுத் தூளியிட்டான் ஒரு
சாமிதிரும் பத்தொடுத்துப் பொற்பிறைக் கொக்கும் சரத்தால்வரு
  ராவணன் நெஞ்சைத் தொலைத்தொற்றைச் சிரத்தைத் துண்டம்இட்டான்

தறிபடு சிரம்                    அவனுக்கு      முளைத்திட
     சரிசரி அரியவே            வரவரக்        கிளைத்திட
தறிபடுகையால் மாதலி            மார்பைக்       கலக்கினான்
     அவன் விடுதோ மரத்தையும்  அய்யன்       விலக்கினான்