566 பந்தித்த ஆசையும் உயிரோடேகொண்டு பறந்தாயோ அண்ணாவே 3. உள்ளதோ சீதையைத் திருடுவதென்ற என்னை ஓட்டினாய் அண்ணாவே உலகிலே கள்ளனுக்குக் கூவென் றவன்மேல் பகைபோலக் காட்டினாய் அண்ணாவே 4. அடிநாளை சாபத்தீடு சீதையாய் வந்ததென்றேன் அலைந்தாயே அண்ணாவே-உடம்பெங்கும் சுடுகிற செந்தலை மடிமேலே கட்டித் தொலைந்தாயே அண்ணாவே 5. நினையாதே சீதையைக் குலையும் வாழ்வென்றசொல் நிறைந்ததோ அண்ணாவே-ராமனை மனிதன் மனிதன் என்ற வாயும் துடுக்கும்எங்கே மறைந்தாயோ அண்ணாவே 6. வள்ளல் கும்பகர்ணன் மாலியவான் சொல்லியும் மருண்டாயே அண்ணாவே-அடங்காமல் துள்ளின மாடுபொதி சுமக்கும் என்றாற்போலே பட்டுச் சுருண்டாயே அண்ணாவே 7. சுற்றமும் சேனையும் உன் பத்துமுடியும் முதல்நாள் சோர்ந்தாயே அண்ணாவே-எல்லாரும் செத்தபிற காகிலும் ராமனை தெய்வமென்று தேர்ந்தாயே அண்ணாவே 8. பரந்த கயிலாசமும் உன்னுடைய தோளுக்கு பற்றுமோ அண்ணாவே-தோள்மேலே சுரந்து குரங்குக் கூட்டம் இப்போ தணியணியா தொத்துமோ அண்ணாவே 9. விரிந்த தேவர்க்கெல்லாம் கடைக்கண் கொடாமல்வெடு வெடுத்தாயே அண்ணாவே-களத்திலே பருந்தும் கழுகும்கொத்த முழுமுழுக் கண்கொடுத்துப் படுத்தாயே அண்ணாவே 10. பூமலர் அம்புகளைக் காமன்கை எய்தெய்து பொழிந்ததே அண்ணாவே-இப்போதிந்த |