570 3. இங்கேமுன்மோதிரம் தந்துதானே இருஎன்று சொன்னேனேஇப்போது அங்கேநீ எழுந்தருள எம்மானே அனுக்கிரகம் செய்தானே-இந்த (சோப) 4. சந்திரன் இந்திரன் தேவர்க்குஸ்தபானம் சகலர்க்கும் சோபனம்ஆகும் இந்த அரக்கியரை நான்கொல்லவேணும் எனக்கிது சோபனம் காணும்-இந்த (சோப) ------ சீதோதேவி அனுமாரை உபசரித்தல் விருத்தம்-102 கனம்மலர்ந்த ராமதூ துவனிது சோபனஞ் சொலக் காதிற் கொண்டாள் தினம்மலர்ந்த சாமிதிரு வடிமலரைத் திசைநோக்கித் தெண்டனிட்டாள் தனம்மலர்ந்தாள் அகம்மலர்ந்தாள் முகம்மலர்ந்தாள் என்அன்னை சனகி முன்னாள் மனமலர்ந்த குறையெல்லாம் மாற்றினாள் அனுமானை வாழ்த்தினாளே. தரு-82 மோகன ராகம் ஆதிதாளம் பல்லவி எந்நாளும் வாழிநீ தானே - என்தெய்வம் உன்னைப்போல் உண்டோ அனுமானே (எந்நா) அநுபல்லவி தென்னிலங்கை அரக்கன் தன்னைப்பட்சித் தாயே பின்னை மங்களம் சொல்லி என்னை ரட்சித் தாயே (எந்நா) சரணங்கள் 1. இருக்கும்சிறை மீட்பேன் என்ற வாக்கியம்-என்முன் உரைத்தபடி செய்தாயே என் பாக்கியம்-அப்பாஉன் கருத்தில்நீ பிடித்ததேவை ராக்கியம்-உனக்குப் பெருத்த மூவுலகும் கொடுத்தென்னசி லாக்கியம் சிரத்தினால் வணக்கம் செய்வதே யோக்கியம் (எந்நா) |