574 சரராமா மனோ கரராமா சௌந் தரராமா ஆ யிரநாமா ராமராமா 2. பள்ளமாயை இதற்குள்ளே புகுந்தெவர்க்கும் பரமபதந்தருவாய் என் கோவே கள்ளனுமாய் நின்று விளக்கும் பிடிக்கிறாய் உன் கபட்டை ஆரறிவார் என் கர்த்தாவே-ராமராமா 3. முக்காடிட்டபிள்ளை முன்னின்ற பிள்ளையல்லால் முதற்குட்டின பிள்ளையை அறியாதே இக்காரியம் போல ஒன்றையொன்றெதிர் காட்டி இடைநின்ற உனைக்காண்ப தெப்போதே-ராமராமா 4. நீதியா நாலாறு பேருக்குள் ஒருவனை நீக்கி அருளும் வித்தை பூண்டாயே ஆதிமூலம் என்ற நாதத்திற் பதம் வைக்க ஆனைக்கு முன்னேவந் தாண்டாயே-ராமராமா 5. கயிற்றைப் பாம்பென்றெண்ணி கலங்கும் வண்ணம் ஒரு கருக்கல் உண்டாகிய வகைபோலே மயக்கத்திலே நாங்கள் மயங்கும் வண்ணமிந்த மயக்கங் காட்டலாமோ நெடுமாலே-ராமராமா 6. ஞாலம் தண்ணீர் அனல் வளிவெளி இவற்றைந்து நாலும் மூன்றிரண்டொன்றாம் அதிகாரா கோலம் மானிடங்காட்டி ஆளுக்குள்ளே ஆளாய் குறுகுறுக்கிறதென்ன ரகுவீரா-ராமராமா 7. மாயைதனைப் படைப்பாய் மாயையும் துடைப்பாய்உன் வல்லமை அறியாதல் லோபூமி மாயைக்குள் திரும்பவும் மயக்கங் காட்டினால் உன் மகிமையை அறிவதெப் படிசாமி-ராமராமா 8. நீயும் சீதையும்பெற்ற தாயும் தந்தையும் என்றே நினைக்கிறோம் நாங்கள் ச தாகாலம் தாயிவள் மகிமையைப் புவிக்குப் காட்ட வேண்டிச் சாமிநீ செய்தாயோ இக்கோலம்-ராமராமா 9. கனிவினாலே எந்த உயிரும் உயிருக்குள்ளே கருத்தும்நீ தெரிவாயே பெரியோனே |