பக்கம் எண் :

575

  சனகி கருத்து மாத்திரம் தெரியாது போலிந்திர
     சாலம் செய்யலாமோ   நீதானே-ராமராமா

10. அக்கினியையும் சுடும் அக்கினி சீதைஎன்று
     அக்கினி அறிந்ததே        இவள்சூட்சி
  இக்கோலம் ராவணன் தீண்டாமல் நிலத்தோடே
     எடுத்தானே இதைவிட      என்சாட்சி-ராமராமா

11. தீயையும் பிழைசொன்ன வாயையும் வடவைச் செந்
     தீயையும் சுடுமிவள்         பிரதாபம்
  வாய்புளித் ததோமாங் காய்புளித்ததோ என்று
     மனதில் எண்ணினாலும்     வெகுபாபம்-ராமராமா

12. எள்ளுக்குள் எண்ணெய்போல் இருக்கிற நீசீதை
     இடத்தில் இருக்கலையோ    பர்த்தாவே
  உள்ளக் கருத்தை வள்ளல் அறியும் என்ற வார்த்தை
     உனையல்லவோ சொல்லாய்  கர்த்தாவே-ராமராமா

13. எதிரரக் கரைக்கொன்றாய் பதியில் எங்களை வைத்தாய்
     இந்தத் தயவுனக் கெங்கே    போச்சோ
  மிதிலை வல்லியை இங்கே சோதித்தாய் எங்களை
     விருந்திட்டுப் பகைகாண     மனதாச்சோ-ராமராமா

14. இழுக்காகிய பொன்னைப் புடத்தில்வைத் தெடுப்பார்கள்
     இவளுக் குண்டோ சொல்லாய்     விதியாசம்
  அழுக்கில் லாத்தங்கத்தைப் புடத்தில் வைத்தெடுத்தாயே
     ஐயா உனக்கு முண்டோ          மதிமோசம்-ராமராமா

------

மக்களையும் மருமகளையும் சக்கிரவர்த்தி புகழ்தல்

விருத்தம்-106

    ஆராத பிரமனிவ்வா றுரைக்கத் தேவர்
           அனுமதியாற் றசரதன்தேர் நிலமேற் கொண்டான்
    காராரும் குழற்சீதைக் குபசரித்தான்
           கற்பகமே வாழிஎன்றான் இளையோன் தன்னைச்
    சோராமல் அண்ணன்தாட் புண்ணும் இந்திரன்
           தோட்புண்ணும் துடைத்தனையே என்றான் கண்ட