580 தரு-87 மோகனராகம் அடதாளசாப்பு பல்லவி இந்த சேதுவைக் கண்டாற் போமே-சனகன் பெண்ணே இகபர சித்தி ஆமே (இந்த) அநுபல்லவி சந்ததமும் மனத்திற் பிரியாதே-சகல பத்தினிகளும் தொழவரும் மாதே (இந்த) சரணங்கள் 1. தந்தை தாயுடனே குருதெய்வ நிந்தனையும்-கதிநீஎன்று தஞ்சம் அடைந்தவரைக் கெஞ்ச அடிக்கும் சற்பனையும்-அகதிகளை அந்தணரைப் பசுவை மைந்தரைக் கொல்லும் வேதனையும்- பஞ்சகாலத்தில் அன்னமிட்டவரைக் கன்னமிட்டிடும் வஞ்சனையும்-பயப்படாமல் நிந்தையான கள்ளைக் குடிப்பதும்-பசு மந்தை உறிஞ்சுகல்லை இடிப்பதும்-நடுச் சந்தி விருட்சங்களை ஒடிப்பதும்-பிறர் சொந்தப் பெண்களைக் கை பிடிப்பதும் நொந்தபேர் பொருளைக் கொண்ட தோஷமும் நோன்புகளை நடுவில் விண்ட தோஷமும் வந்தபேர் பசிக்க உண்ட தோஷமும் மடிநழுவும் பெண்களைக் கண்ட தோஷமும் (இந்த) 2. கேடுசெய்பவ ரோடுறவாகிய நிலையும்-வயிற்றினிற்ப கீர்என்றிட வழக்கோரம் சொல்லிய கெடுதலையும்-பாதிசாமத்தில் வீடுகளில் மறைந்தோடி நெருப்பிடும் புலையும்-கண்ணிகள் குத்தி விலங்கும் பறவைகளும் கலங்கிடவே செய்யும் கொலையும்- ஆணும் பெண்ணும் கூடும் கூட்டுறவைப் பிரிப்பதும்-வழி பாடுதம்பி நடக்கக் குறிப்பதும்-நடுக் காடுகளிலே வெட்டிப் பறிப்பதும்-விளை யாடும் பிள்ளைக் கழுத்தை முறிப்பதும் |