பக்கம் எண் :

581

  நாடிக் கொடுப்பவரைத்         தடுக்கும் பாவமும்
     நாணிழந்த பெண்ணுடன்     படுக்கும் பாவமும்
  கோடைக்குளத்தைத் துத்து      விடுக்கும் பாவமும்
     கோட்சொல்லிக் குடிகளைக்  கெடுக்கும் பாவமும்          (இந்த)

3. மாலையிட்டவனை இகழ்ந்து சொல்லும் பாதகமும்-வேறொருவனை
     மருவியதனில்வந்த கருவை யழிக்கும் தோதகமும்-பாலும்தேனும்
  போல இருப்பவரைக் கலைக்கும் மித்திர பேதகமும்-மாதவிடாய்
     பூத்த மங்கையரைச் சேர்த்தணைத்த சூதகமும்-தருவேன் என்று

  மேலவர்களை அலைக்             கழிப்பதும்-வழிச்
  சாலைசத்திரங்களை                அழிப்பதும்-செய்யும்
  கால செபதபத்தை                 ஒழிப்பதும்-இடும்
  பாலே கவீசரைப்                  பழிப்பதும்

  ஏலும் இறைச்சிகளைத்         தின்ற     தோஷமும்
     இருட்டினில் இடமில்லை    என்ற     தோஷமும்
  ஆலயங்களிற் புணர்          கின்ற     தோஷமும்
     ஆற்றில் அம்மணத்துடன்   சென்ற    தோஷமும்      (இந்த)

------

ஸ்ரீராமர் சீதைக்கு வந்தவழி அடையாளம் கூறல்

விருத்தம்-110

திருவணைப் பலன் ஈதென்று சிலையினாற்பகுத்த ராமன்
தருமலர்க் குழலியான சானகி வதனம் நோக்கிப்
பொருமதில் அயோத்தி விட்டுப் புறப்பட்ட நான்முன்தொட்டு
வரும்வரி அடையா ளங்கள் வகுத்திட்டான் தொகுத்திட்டானே.

தரு-88

ஆனந்தபைரவி ராகம்                          அடதாளசாப்பு

பல்லவி

சனகன்மாதே-பாராய்-சனகன்மாதே           (சன)

அநுபல்லவி

நினைவினுடன்மனம் மகிழப்பாராய்ப் பெண்ணே (சன)