582 சரணங்கள் 1. இலங்கைநகர் மேலே முந்நாள் எழுந்தனுமான் பாயவே இடந்தரும் மயேந்திரம்இது தானே தலம்புகழ வேஎன்னை வருணன் அடைக்கலம் என்று சரண்புகுந்த தானம் இது தானே-பெண்ணே (சன) 2. மதிகதிர் உள்ளளவும்போம் பொதியமலை இது திவ்ய மகத்துவமுள்ள அகஸ்திய முனி தானம் கெதியில் எதிரேநின்ற மலையிது சுக்கிரீவன்வாழ் கிஷ்கிந்தை அவனுக்கா தீனம்-பெண்ணே (சன) 3. சந்திரனை நட்சத்திரம்போல் உன்தனை இணங்கவே சகி செனங்கள் ஆகஒருக் காலே இந்தமலை நின்றும்வா னரமாதர் உருமாறி இதோ வருகின்றார்பார் கண் ணாலே-பெண்ணே (சன) 4. கிளைக்கும்என் அம்பினாலே எழுமரங்களும் வீழ்ந்து கிடக்கிறதைப் பார்நமக்கு நேராய் வளைக்கும் மழைக்காலத்தில் தம்பியுடன் நானிருந்த மாலிய வந்தமலை இதனைப் பாராய்-பெண்ணே (சன) 5. துதிசெய்துன் பணிகளைச் சுக்கிரீவன் காட்ட நான் துயருற்ற மதங்கஅடி வாரம் அதிக பயபக்தியா என்னையும் உன்னையும் காத்த அனுமன் கண்டதிவிடம்பம்பை ஓரம்-பெண்ணே (சன) 6. தயவாக மனந்தேற்றிப் பசியாற்றிஎனைப் போற்றி சபரி முத்திபெற்ற திந்த சாலை உயிர்போலும் உனைத்தேடி வாடும் வழிமேற்க வந்தன் உயிர்கொண்ட மூலையிந்த மூலை-பெண்ணே (சன) 7. எதிர்தரும் ராவணன் கையில் பழமை பாராட்டி உன்னால் இறந்த தந்தைக் கிங்கே சமஸ் காரம் சதிர்செய்மூன்று வருஷமும் நாமிருக்கத் தம்பி செய்த சாலையிது பஞ்சவடி தீரம்-பெண்ணே (சன) 8. இவிடம் மாரீசன்பட்ட திவிடம் சூர்பநகி கெட்ட திவிடம் கரதூஷணர் வி நாசம் |