பக்கம் எண் :

582

சரணங்கள்

1. இலங்கைநகர் மேலே முந்நாள் எழுந்தனுமான் பாயவே
     இடந்தரும் மயேந்திரம்இது        தானே
  தலம்புகழ வேஎன்னை வருணன் அடைக்கலம் என்று
     சரண்புகுந்த தானம் இது         தானே-பெண்ணே     (சன)

2. மதிகதிர் உள்ளளவும்போம் பொதியமலை இது திவ்ய
     மகத்துவமுள்ள அகஸ்திய முனி    தானம்
  கெதியில் எதிரேநின்ற மலையிது சுக்கிரீவன்வாழ்
     கிஷ்கிந்தை அவனுக்கா           தீனம்-பெண்ணே      (சன)

3. சந்திரனை நட்சத்திரம்போல் உன்தனை இணங்கவே
     சகி செனங்கள் ஆகஒருக்        காலே
  இந்தமலை நின்றும்வா னரமாதர் உருமாறி
     இதோ வருகின்றார்பார் கண்      ணாலே-பெண்ணே    (சன)

4. கிளைக்கும்என் அம்பினாலே எழுமரங்களும் வீழ்ந்து
     கிடக்கிறதைப் பார்நமக்கு         நேராய்
  வளைக்கும் மழைக்காலத்தில் தம்பியுடன் நானிருந்த
     மாலிய வந்தமலை இதனைப்       பாராய்-பெண்ணே   (சன)

5. துதிசெய்துன் பணிகளைச் சுக்கிரீவன் காட்ட நான்
     துயருற்ற மதங்கஅடி                 வாரம்
  அதிக பயபக்தியா என்னையும் உன்னையும் காத்த
     அனுமன் கண்டதிவிடம்பம்பை         ஓரம்-பெண்ணே  (சன)

6. தயவாக மனந்தேற்றிப் பசியாற்றிஎனைப் போற்றி
     சபரி முத்திபெற்ற திந்த     சாலை
  உயிர்போலும் உனைத்தேடி வாடும் வழிமேற்க வந்தன்
     உயிர்கொண்ட மூலையிந்த   மூலை-பெண்ணே         (சன)

7. எதிர்தரும் ராவணன் கையில் பழமை பாராட்டி உன்னால்
     இறந்த தந்தைக் கிங்கே சமஸ்     காரம்
  சதிர்செய்மூன்று வருஷமும் நாமிருக்கத் தம்பி செய்த
     சாலையிது பஞ்சவடி             தீரம்-பெண்ணே      (சன)

8. இவிடம் மாரீசன்பட்ட திவிடம் சூர்பநகி கெட்ட
     திவிடம் கரதூஷணர் வி          நாசம்