583 இவிடம் கோதாவிரி அன்னை இவிடம்தம்பி கண்டதென்னை இவிடம் உன்னைராவணன் செய் மோசம்-பெண்ணே (சன) 9. தனித்துநீ புலம்பும்நாள் உன்னிமித்தம் உயிர்விடும் சடாயுவனம்இது அவன்என் சாமி அநித்தியம் இல்லா அகஸ்தியமுனி எனக்குப் படைகொடுத்த இடம் அறிவையே ஈதல்லோ புண்ணிய பூமி-பெண்ணே (சன) 10. இது சுதிஷ்ட முனிவனது இதுதண்டகாரணியம் இதுவே முனிவர்கட்கு வாசம் இது சரபங்கமுனி தேவியுடன் முத்திபெற்ற இடமிது அதிகப்பிர காசம்-பெண்ணே (சன) 11. இங்கே விராதனைக் கொல்ல தேவனாகி எனைப் போற்றி ஏகினான் அல்லவோ வானின் மீதே தங்கப் பணிஉனக்குஅது சூசைதர எனை அத்திரி தயவோ டாதரித்த ஸ்தலம் ஈதே-பெண்ணே (சன) 12. கன்று பிரிந்தபசுப் போல்நான்பிரியப் பரதன்வந்து கண்டமலை இது சித்திரக் கூடம் அன்றி ளையவன் தள்ள ஏறிவந்த யமுனைஇதுக் கடையாளம் பார் மூங்கிலாற் சய் ஓடம்-பெண்ணே (சன) 13. ஈரேழுவருஷமும் நம்மைவரு வழிநோக்கி இருக்கும் பரத்துவனுக் கிது காணி காரெழு குகன் காக்கும் கங்கையிது நம்மைமுன்னாள் கரைஏற்றி விட்டதிந்த தோணி-பெண்ணே (சன) 14. சீலமுள்ள தந்தையார்க்கு எள்ளும்நீரும் நான்இறைதத தீர்த்தமிது கங்கைநதி நேத்தி மூலமுதற் பொருளிருக்கும் ஆலிலையைப் போல் இதோ முன்காணும் நகரம்அ யோத்தி-பெண்ணே (சன) |