பக்கம் எண் :

605

  மாதலத்தில் உள்ளதீர்த்தமும்    ஓதுசமுத்திர தீர்த்தமும்
     வரிசையுடன் அனுமான்                    கொண்டுவர
  சோதிமிக்க ஆலாத்தி          மீதில் லட்சுமிப்பெண்கள்
     சோபனஞ் சொல்லிக்                      கொண்டுவர
  வானகத்தில் அமுர்தத்தை      மானமிகு முனிவர்கள்
     மகிழ்ந்து மகிழ்ந்தாசிகள்                   விண்டுவர
  ஞானமிக்க நாரதர்            கானமிக்க வித்தைமுறை
     நானா விதம்பாடிக்                        கண்டுவர

  மகதர் குருதர்பலர்            கவுடயவனர்பலர்
  வடுகர்குடகர்பலர்             துளுவர் சளுவர்பலர்
  வங்கர் கங்கர்பலர்            கொங்கணர் தெங்கணர்பலர்
  மாளவர் சாளவர்பலர்          லாடர்கள் மாராடர்பலர்

வங்கா ளம்பத் பரத்து ளோர்பலர் கொங்கீழங்குச்சரத்து ளோர்பலர்
வந்தே சந்தித் திறைஞ்சி முடிபணி யுந்தோறும் பட்டுதிர்ந்த பொடிமணி
வைத்த பதத்தில் உறுத்தி மற்றவர் சுற்றிலும் ஒற்றி வரச்சில கொற்றவர்
மட்டுவ குத்துவ ரச்சில கட்டியம் உரைத்திடுபட்டர் செலச்செல

     வாமப ராக்கு வெகு        நாமப ராக்கு ரண
     வீமர்ப ராக்கு ரகு         ராமர் ராமக்கு என
     வாசவர்க்கும்             கேசவர்க்கும்
     ஈசுரர்க்கும்               மீசுரர்க்கும்

வல்லோர் எனப்பிதிர்கள்         பல்லோர்களும் துதிக்க
நல்லோர் களும்கதிக்க           எல்லோர்களும் துதிக்க (மகு)

2. பூசுர வசிட்டன் நிசு          வாசன்-உர
 கேசவன் குறுமுனிவன் பரத்து   வாசன்
  பூசுத கௌத மனுடன்வி       யாசன்-மிகு
  காசிபன் கோசிகன் துரு       வாசன்

  பூந்துகில் சுற்றிநல்           மாந்தழைவைத்ததிவ்ய
     பூரணகும்பம் அவரவர்                    கொடுக்க
  ஏந்து நெய்யும் பொரியும்     மாந்திஅக்கினிதேவன்
     எழும்பி எழும்பி வரக்கொழுந்              தெடுக்க
  போந்த முகுர்த்தம்வந்து      நேர்ந்ததெனத்திரண்டு
     புண்ணிய புரோகிதர் கடு                   கடுக்க