பக்கம் எண் :

607

  அனமிசை வருகிற        அயன்வரு கமலமும்
  வனிதை சனகிதிரு        மலர்முக கமலமும்

     அன்பூறும் பச்செனும் சொ   ரூபமும்
     முன்காணும் கைப்பிரசண்ட   சாபமும்
     அங்கேகண் கொண்டுகண்ட  பேரிதை
     இங்கே என்சொல் வோமென வேயதை

     அந்தர துந்துவி தும்தும்          தும்மென
     முந்திய சங்குகள் பம்பம்         பம்மென
     அந்தைகள் பம்பைகள் திம்திம்    திம்மென
     மொந்தை அதிர்ந்தது தொம்தொம் தொம்மென

ஆதாளி கொண்டுவிரி           பாதாளமும் திசையும்
ஆலோலம் மண்டுகடல்          போலே முழங்கிவிட
அந்த லோகமும் இந்தலோகமும்   எந்தலோகமும் திரியும்
அனைத்துயிர் களும் ஒக்க        மலர்க்கை குவித்து நிற்க
அதிஷ்டம் அயோத்தி தக்க       அதிஷ்டமுனிவன் வைக்க (மகுட)

------

ஸ்ரீராமர் அரசியல்

விருத்தம்-125

    திருமுடிமேல் மகுடாபி ஷேகம் கொண்டு
          சீதையுடன் ரத்தினசிம்மா சனமேற்கொண்டு
    தருமநிலை வசிஷ்டமுனி உரைக்கக் கொண்டு
          தம்பியர்மன் னவர்வணங்கச் செங்கோல் கொண்டு
    வருமறையோர் தம்மாசீர் வாதங் கொண்டு
          மன்னுயிரைத் தன்னுயிர்போல் மனத்துட்கொண்டு
    கருமுகில்நேர் மேனிரகு ராமன் பூமி
          காத்திட்டான் ஒருகுடைக்கீழ்ச் சேர்த்திட்டானே

தரு-101

அசாவேரிராகம்                               ஆதிதாளம்

பல்லவி

காட்சியுடனே ராமன் தாழ்ச்சியில்லாமல்-அர
சாட்சிசெய் திருந்தானே                        (காட்)