609 ராமராச்சியத்துக்கிணை ஆமோஎந்த லோகமும் நாமும் அங்கேபோவோமென்று பேச சாம பேததான தண்டம் அறிந்தராச சமூகங்கள் எங்கும் வந்து மூச காமராசனும் அந்த திவ்விய மங்கள விக்கிர கத்தைக் கண்டுகண்கள் கூச நேமப்படியே மந்திரி பிரதானிகளும் துய்ய நெறியார் மனுவின்படி உரியஅரசு செய்ய ஏமம்பெற மாதமும் மாரிஎங்கெங்கும் பெய்ய இகத்தினில் உள்ளசர் வசீவரத்து மாக்களும் உய்ய (காட்) சமாப்தியில் மங்களம் பாயிரத்தில் உள்ள மங்களத்தை அவ்விருத்தத்தோடு இங்கே பாடிக்கொள்க சமாப்தியில் சோபனம் பாலகாண்டத்தில் உள்ள சோபனத்தைமட்டும் இங்கே பாடிக்கொள்க வாழி விருத்தம்-126 இரவிகுலம் வாழிசீ தாராமர் வாழி இளையவர்மூ வரும்வாழி இவர்பெண்டிர் வாழி குருவசிஷ்டர் சுமந்திரர் அனுமார் சுக்கிரீவர்வாழி குருவாழி குகர்விபீ ஷணர்வாழி இந்தப் பரவியபார் கார்வாழி மும்மூர்த்தி வாழி பலஅமரர் முனிவர் மதிகதிர்கள் வாழி தருவளர் காழிஅருணா சலகவி சொல்லியகீர்த் தனைப்படிப் போர்கேட்போரும் வாழி வாழி! |