612 போயின குரங்கினைத் தொடர்ந்து போய்இவண் ஏயினர் உயிர்குடித் தெவ்வம் தீர்கிலம் வாயினும் மனத்தினும் வெறுத்து வாழ்துமேல் ஓயும்நம் வலியென உணரக் கூறினான் மற்றவன் பின்னுறு மகோ தரப்பெயர்க் கற்றடந் தோளினான் எரியும் கண்ணினால் முற்றுற நோக்கினான் முடிவும் அன்னதால் கொற்றவ கேள்என இனைய கூறினான் இடுக்கிவண் இயம்புவ தென்னை ஈண்டெனை விடுக்குவை யாமெனின் குரங்கை வேரறுத்து ஒடுக்கரும் மனிதரை உயிருண்டு உன்பகை முடிக்குவென் யான்என முடியக் கூறினான் இச்சிரத் தவன்உரைத் திறுக்கும் எல்லையில் வச்சிரத் தெயிற்றவன் வல்லை கூறுவான் அச்சிரத்தைக் கொருபொருளன்று என்றனன் பச்சிரத் தம்பொழி பருதிக் கண்ணினான் நில்நில் என்றவன்தனை விலக்கி நீயிவண் என்முனும் எளியைபோல் இருந்தியோ எனா மன்முகம் நோக்கினன் வணங்கி வன்மையால் துன்முகன் என்பவன் இனைய சொல்லுவான் ஒல்வது நினையினும் உறுதி ஓரினும் வெல்வது விரும்பினும் விளைவு வேண்டினும் செல்வதங் கவருழைச் சென்று தீர்ந்தறக் கொல்வது கருமம்என்று உணரக் கூறினான் காவலன் கண்ணெதிர் அவனைக் கைகவித்து யாவதுண் டினிநமக்கு என்னச் சொல்லினான் கோவமும் வன்மையும் குரங்குக் கேயெனா மாபெரும் பக்கன்என் றொருவன் வன்மையான் மானுடர் ஏவுவார் குரங்குவந் திவ்வூர் தானெரி மடுப்பது நிருதர் தானவர் ஆனவர் அதுகுறித்து அழுங்குவார் எனின் மேல்நிகழ் தக்கன விளம்ப வேண்டுமோ |