பக்கம் எண் :

616

பொய்யுரைத் துலகினில் சினவினார் குலம் அறப்பொருது தன்மேல்
நெய்யுரைத் துறையிலிட்டு அறம்வளர்த் தொருவனாய் நெறியில்நின்றான்
மையுரைத் துலவுகண் மனைவிபால் வரம்அளித்து அவைமறாதே
மெய்யுரைத் துயிர்கொடுத்து அமரரும் பெறுகலா வீடுபேற்றான்

அனையவன் சிறுவர் எம்பெரும உன்பகைஞரால் அவரை அம்மா
இனையர் என்றுணர்தியேல் இருவரும் ஒருவரும் எதிரிலாதார்
முனைவரும் அமரரும் முழுதுணர்ந் தவர்களும் முற்றும் மற்றும்
நினைவருந் தகையர் நம்வினையினால் மனிதராய் எளிது நின்றார்

உரம் ஒருங்கியது நீர்கடையும் வாலியதுமார்பு உலகை மூடும்
மரம் ஒருங்கிய காரதியர் விராதனது மால்வரைகள் மானும்
சிரம் ஒருங்கிய இனிச்செரு ஒருங்கியதெனின் தேவர்என்பார்
பரம் ஒருங்குவதலால் பிறிதொருங் காததோர் பகையுமுண்டோ

இந்தமாநகரைச் செருமுருக்கிய கான்கதிரிசிரத் தோன்
முந்தமானாயினான் வாலியே முதலினோர் முடிவு கண்டால்
அந்தமான் இடவனோடு ஆழிமா வலவனும் பிறரும் ஐயா
இந்த மானிடவராம் இருவரோ டெண்ணலாம் ஒருவர் யாரே?

இன்னம் ஒன்றுரைசெய்வேன் இனிதுகேள் எம்பிரான் இருவராய
அன்னவர் தம்மொடும் வானரத்தலைவராய் அணுகி நின்றார்
மன்னனும் நம்பகைஞராம் வானுளோர் அவரொடும் மாறுகோடல்
கன்மம் அன்றிது நமக்கு றுதிஎன்றுணர்தலும் கருமம் அன்றால்

இசையும் செல்வமும் உயர்குலத்தியற்கையும் எஞ்ச
வசையும் கீழ்மையும் மீக்கொள கிளையொடும் மடியாது
அசைவில் கற்பினவ் அணங்கை விட்டருளுதி அதன்மேல்
விசையம் இல்லெனச் சொல்லினன் அறிஞரின் மிக்கான்
 (இராவணன் மந்திரப்படலம் 58, 64, 65, 72, 75, 77, 81, 84, 85,
                                           90, 97, 98, 99)

விபீஷணரை ராவணன் சீறிக்கூறல்

விருத்தம்-4 தரு-3

இச்சைஅல்லன உறுதிகள் உரைக்குவென் என்றாய்
பிச்சர் சொல்லுவ சொல்லினை என்பெரு விறலைக்
கொச்சைமா னுடர்வெல்குவர் என்றனை குறித்தது
அச்சமோ அவர்க்கு அன்பினோ யாவதோ ஐயா