624 பேயை யாளியை யானையைக் கழுதையைப் பிணித்தது ஆயதேர்ப்படை ஐயிரு கோடிகொண்ட மைந்தான் தாயை ஆயினும் சலித்திடு வஞ்சனைதவிரா மாயையான் உளன் மகோதரன் என்றொரு மறவோன் குன்றில் வாழ்பவர் கோடி நாலைந்தினுக்கு இறைவன் இன்றுளார் பினைநாளையிலார் எனஎயிற்றால் தின்றுளான் நெடும் பல்முறை தேவரைச் செருவின் வென்றுளான் உளன்வேள்வியின் பகைஞன் ஓர்வெய்யோன் மண்ணுளாரையும் வானிலுள்ளாரையும் வகுத்தால் உண்ணும் நாளொருநாளின் என்றொளிர் படைத்தானை எண்ணின் நாவிருகோடியன் எரிஅஞ்ச விழிக்கும் கண்ணினான் உளன் சூரியன்பகை என்றோர் கழலான் தேவரும் தக்கமுனிவரும் திசைமுகன் முதலா மூவரும் பக்கம் நோக்கியே மொழிதர முனிவான் தாவரும் பக்கம் எண்ணிரு கோடியின் தலைவன் மாபெரும் பக்கன் என்றுளன் குன்றினும் வலியான் உச்சிரத் தெரிகதிர் என உரத்தெரி முகத்தன் நச்சிரப்படை நாலிரு கோடிக்கு நாதன் முச்சிரத்தையில் தலைவற்கு வெலற்கரு மொய்ம்பன் வச்சிரத்து எயிற்றவன் உளன் கூற்றுவன் மாற்றான் அசஞ்சலப்படை ஐயிருகோடியான் அமரின் வசஞ் செயாதவன் தானன்றிப் பிறரிலா வலியான் இசைந்த வெஞ்சமத் தியக்கரை வேரொடும் முன்நாள் பிசைந்து மோந்தவன் பிசாசன் என்றுளன் ஒருபித்தன் சில்லிமாப் பெருந்தேரோடும் கரிபரிசிறந்த வில்லின் மாப்படை ஏழிருகோடிக்கு வேந்தன் கல்லிமாப்படி கலக்குவான் கனல்எனக் காந்திச் சொல்லும் மாற்றத்தன் துன்முகன் என்றறம் துறந்தோன் இலங்கை நாட்டினன் எறிகடல் தீவிடை உறையும் அலங்கல் வேற்படை ஐயிருகோடிக்கும் அரசன் வலங்கொள் வாள்தொழில் விஞ்சையர் பெரும்புகழ் மறைத்தான் விலங்கு நாட்டத்தன் என்றுளன் வெயில்உக விழிப்பான் |