பக்கம் எண் :

77

ஸ்ரீ

ஸ்ரீராமஜெயம்

இரண்டாவது

அயோத்தியா காண்டம்

சக்கிரவர்த்தி முடிசூட ஸ்ரீராமரை வேண்டுதல்

விருத்தம்-1

    வனிதைமணிச் சீதையுடன் அயோத்திமேவி
          மணவாள ராமன்என இருந்த நாளில்
    கனிவுபெறப் பரதனைசத் துருக்கனனோடே
          கைகயன்பால் விடுத்துசின்னாள் கழிந்தபின்பு
    இனியதச ரதன்வதிஷ்டன் மந்திரி மாரும்
          இசைந்தபடித் துறந்திட ராகவனைக் கூவித்
    தனிமகுடம் புனையெனவே அவனுக்கன்பாய்ச்
          சாற்றுவான் தன்கவலை ஆற்றுவானே
 

தரு-1

மத்தியவாதி ராகம்                        ஆதிதாளம்

பல்லவி

இந்தமனுத்தர வேணும் மகனே - ராமா
இந்தமனுத்தர வேணும் மகனே                        (இந்த)

அநுபல்லவி

இந்த மனுத்தர வேணும்          மகனே-ராமச்
சந்திர னேபுவிஆளத் தகும் நீஉத் தமனே              (இந்த)
 

சரணங்கள்

1.  அறுபதி னாயிர வருஷ                 காலம்-வாழ்ந்தேன்
     அதிலே காணாதெல்லாங் கண்டறிந்தேன் இந்திர சாலம்
   பருவதமோ என் காயஸ்                தூலம்-இனிப்
     பார்க்கவே ணும்என்கண்ணாரநீ பாராளும் கோலம்(இந்த)

2. முடியாத மோகாந்த                     காரம்-இத்தை
     முதுமையிலும் துறவாமல் இருந்தென்ன   சாரம்