பக்கம் எண் :

78

  குடிதாங்கி எனக்கோர் உப               காரம்
     குவலயம் கைக்கொண்டு முத்திகொடுப்பதுன்றன் பாரம்     (இந்த)

3.  ஒருவன் அறுபதினாயிரத்               தோரை-கங்கை
     உதவிமுத்தி கொடுத்தானே பகிரதன்முன் னோரை
   இருநிலத்தில் அதுபோலஉன்             பேரை
     எனக்கு முத்திதந்தாள்வாய்இப்          பாரை         (இந்த)

4. உள்ளத்தை உன்னோடே சொன்          னேனே-முன்னாள்
     ஊமைகண்ட கனவாய் உள்ளடக்கி      னேனே
  பிள்ளைக்கலி தீர்த்த பெரு               மானே
     பெரும் புவிநீகொள்ள முத்திபெறவேணும் நானே         (இந்த)

5. மலர்க்கையால் பிடிப்பாய் செங்                கோலே-என்தன்
     வார்த்தை தடுக்காய் எனவே உரைத்தேன்ஒரு காலே
  தலைச்சுமை தந்தான் என்றென்                மேலே
     தாழ்வாய் எண்ணாதே இனித தாங்காதென்    னாலே    (இந்த)

6. வாழையடி வாழையென                  மேலே-இந்த
     மண்டலத்தை ஆண்டதுண்டு மன்னர்ஒரு காலே
  சூழ்மதில் அயோத்தியை அது             போலே-நீயும்
     சுமந்தாள் வேணும் என்தன் சொல்வழியி  னாலே(இந்த)

7. குலத்தில் உள்ள குறையெல்லாம்          வாங்கும்-உன்தன்
     குணத்தாலே உலகெல்லாம் மென்மேலே ஓங்கும்
  மலைக்கு மலையல்லவோ                தாங்கும்-இந்த
     மண்டலத்தை நீதாங்கினால் என்கவலை  நீங்கும்(இந்த)

------- 

ஐம்பத்தாறு தேசத்து ராஜர்கள் வருதல்

விருத்தம்-2

ஈங்கிவை இப்படிமகனை இசையக் கூறி
     இனியதச ரதராசன் கணிதர் சொல்லப்
பாங்குபெறு தேசரா சர்க்கு ராமன்
     பட்டாபி ஷேகம்இன்றைக் கறிவீர் என்றும்