793 அடுக்கிய உலகம்மூன்றும் ஆதரத்தூதர் கூற இடுக்கொரு பேருமின்றி அயோத்திவந் திருந்தார்என்றால் தொடுக்குறு கவியால்மற்றைத் தொகையின் முடிவுதோன்ற ஒடுக்குறுந் துரைக்குந்தன்மை நான்முகத் தொருவற்குண்டோ சூழ்கடல் நான்கின் தேரயம் எழுவகையாகச் சொன்ன ஆழ்திரை ஆற்றின்நீரோடு அமைத்திஇன்று என்னாம்என்று ஊழயின் இறுதிசெல்லும் தாதையின் உலவிஅன்றே ஏழ்திரை நீரும்தந்தான் இடர்கெடமருந்து தந்தான் தெய்வ நீராடற்கொத்த செய்வினை வசிட்டன்செய்ய ஐயமில சிந்தையான்அச் சுமந்திரன் அமைச்சரோடும் நொய்தினின் இயற்ற நோன்பின்மாதவர் நுனித்துக்காட்ட எய்தின இயன்றபல்வேறு இந்திரற்கியன்ற என்ன அரியணை அனுமன்தாங்க அங்கதன் உடைவாள்ஏந்தப் பரதன்வெண் குடைகவிக்க இருவரும் கவரிபற்ற விரிகடல் உலகம்ஏத்தும் வெண்ணெய் மன்சடையன் வண்மை மரபுளோன் கொடுக்கவாங்கி வசிட்டனே புனைந்தான் மௌலி வெள்ளியும் பொன்னும்ஒப்பார் விதிமுறை மெய்யின்கொண்ட ஓள்ளிய நாளின் நல்லஓரையின் உலகம்மூன்றும் துள்ளின களிப்ப மோலிசூடினான் கடலின்வந்த தெள்ளிய திருவும் தெய்வப்பூமியும் சேரும் தோளான் (திருமுடி சூட்டுப்படலம் 11, 12, 14, 15, 16, 17) ஸ்ரீராமர் அரசியல் விருத்தம் -125 தரு-101 விரதநூல் முனிவன்சொன்ன விதிநெறி வழாமை நோக்கி வரதனும் இளைஞற்கு ஆங்கன் மாமணி மகுடம்சூட்டிப் பரதனைத் தனதுசெங்கோல் நடாவுறப் பணித்து நாளும் கரை தெளிவிலாத போகக்களிப்பினுள் இருந்தான் மன்னோ உம்பரோ டிம்பர்காறும் உலகம்ஓர் ஏழும்ஏழும் எம்பெருமா னென்றேத்தி இறைஞ்சி நின்றேவல்செய்யத் |
|
|
|