81 கந்தப் பொடிகள் இறைப்பார்-மாவணப் பந்தலிட்டந் தரவெளி மறைப்பார் 6. வானவர்கள் வந்து திரிவார்-அடிக்கடி மேனகை ஊர்வசி நடம் புரிவார் கான வித்தைகள் படிப்பார்-அதுக்கினம் ஆனகோகிலம் போலச்சதி பிடிப்பார் 7. அங்கே எதிர் சொல்லுவார்-இடங்காட்டி இங்கே இரும் இரும் எனச் சொல்லுவார் சிங்காசனம் அணிவார் - கௌசலை கண்காணவே இணையடி பணிவார் 8. சடங்குகள் செய்வாரும்-சமித்துகள் இடம்படு தருப்பைகள் கொய்வாரும் உடந்தையாய்த் திரிவாரும்-பொன்மழை இடங்கண்டவர்க் கெலாம் சொரிவாரும் 9. ரம்பையர் நடமாட-வீணையில் தும்புருநாரதர் இசைபாட செம்பொன் மௌலிசூட-ராமற்குச் சம்பிரம் சொல்ல மன்னர் எழுந்தோட 10. சல்லரி பேரி தாளம்-துந்துமி மல்லரியொடு நரகெச மேளம் சொல்லிய அண்ட கோளம்-கிழிபட எல்லையும் குமுறிடுமே நீளம் 11. இப்படிக் கொண் டாடி-ராமனுக்கு ஒப்பனை செய்வதேதென நாடி அப்போது தோய்ப் பாடி-கூனியும் வெப்புடன் வந்தாளேகுடி கேடி ------ கூனி கைகேசியைக் கலைக்கவருதல் விருத்தம்-4 துதித்திடும் அயோத்தி ஆளும சொர்ணமா முடிரா மற்கே பதித்திட வேணு மென்று பலரும்ஆர்ப் பரிப்பக் கண்டாள் |