பக்கம் எண் :

85 

5.    ஊருக்கோ பால் வார்த்துண்பது உடலுக்கோ பால்வார்த் துண்பது
        ஓதடி - செய்வ - தேதடி-அடி
    ஆருக்கும் பெண்ணே மண்பிள்ளையானாலும் தன்பிள்ளை என்பது
        அறியாயோ-ஒன்றும்-குறியாயோ
6.    கௌசலை பிள்ளைக்குப்பட்டம் கட்டினால் உன்பிள்ளைக்கென்ன     
         கட்டுவாய்-எவரைக்-கிட்டுவாய்-பரதன்
     தவசியாய் சந்நியாசியாகிப் பரதேசம் போவதேநல்ல
          சமர்த்தடி-கோபத்தை-அமர்த்தடி

7.    சீரான கோசலை வீட்டுச் சிறுக்கிக்கும் சிறுக்கியாக
          செகுத்தாயோ-என்னை வகுத்தாயோ-அடி
     யாரார்கையிலென்ன படவேணுமோ அதெல்லாம் பட
          லபித்ததே-தெய்வம்-சபித்ததே

8.    பலநாளும் உன்னோடே நான்தான் பாடுபட்டதெல்லாம் வீணே
          பாதகி-அடி-தோதகி-ஐயோ
     இலவுகாத்த கிளிபோலே போகவோநான் உன்னைநம்பி
          எண்ணினேன்-வீம்பு-பண்ணினேன்

9.    நண்ணும் தன்மகன் மேலேபோல் உன்மகன்மேலே கோசலை
          நைவாளோ-பட்சம்-செய்வாளோ-அடி   
    கண்ணில் எண்ணெயே கரிக்கும் பிடரியில் எண்ணெய் தானென்ன
          கரிக்குமோ-அன்பு-தரிக்குமோ

10.   நாயகன் கோசலை பிள்ளையாகில் உனக்கென் னவரும்
          நன்மையே-சொல்வாய்-உண்மையே-ஆர்க்கும்
     தாய்கையிற்பசும் பொன்னிலும் தன்கையில் தவிடேமேலாம்
          தையலே-இதென்ன-மையலே

11.   என்ன செய்வேன் என்கிறாய் நீ முன்னே கொண்ட வரம் இரண்டும்
          இல்லையோ-தரச்-சொல்லையோ-அந்த
    மன்னவன் உனக்குச் சொன்ன வார்த்தைக் கிரண்டு சொல்வானோ
          வாங்கடி-இதுவே-பாங்கடி

12.   ஒருவரம் பரதன் நாடாள-ஒருவரம் ராமன் காடாள
          ஓதடி-இதே-சூதடி-இந்த