பக்கம் எண் :

87

     உற்றதுசொன்னால் அல்லோ அற்றதுபொருந்தும் நான்
          உள்ளது சொன்னேன் காணும்          மன்னவரே

5.    அந்தவரம் இரண்டும் தந்தேன் இனிஉனக்கு
          அட்டிசொல்வேனோ கைகை      மின்னரசே-உன்
     மைந்தன் ராமன்ஆணை வார்த்தை பிரட்டறியேன்
          வாங்கிக் கொள்வாய் கைகை      மின்னரசே

6.    முன்ஒருவரம் பரதன் நாடாள மாணிக்க
          முடிபெற வேணும் அய்யா        மன்னவரே-அதின்
     பின்ஒருவரம் ராமன் காடாளச் சடைமுடி
          பெற வேணும் தாரும் அய்யா     மன்னவரே

7.    மலைப்போல் ஒருவர்செய்த வஞ்சனையோ என்ன
          வார்த்தை சொன்னாய் கைகை    மின்னரசே-அது
     கலைப்பார் கலைத்தாக்கால் கல்லும் கரையுமென்ற
          கதைபோல ஆச்சுது கைகை      மின்னரசே

8.    கலைப்பாள் கௌசலை உமக்குண்டெனக் குவேறே
          கலைப்பார் ஒருவரில்லை    மன்னவரே-நீர்
     சலத்தால் சொல்லுகிறீரோ சொன்னதே சொன்னதுநான்
          தடுமாறிச் சொல அறியேன்   மன்னவரே

9.    மூத்தவனைத் தள்ளிவிட்டு இளையவனைப் பட்டங்கட்டல்
        முறைமை அல்லவே கைகை        மின்னரசே-யாரும்    ஏத்தும்
மனுவிக்யானசாஸ்திரத்தினில் முன்னம்
          இசைத்த படிஇதுவே             மின்னரசே

10.   மூத்தவன் இந்திரனோ உபேந்திரனோ அகிலாண்டம்
          முழுதும் செலுத்துகிறான்          மன்னவரே-வெகு
     நேத்தியிது முன்சொன்ன வார்த்தையை விட்டுசாஸ்திர
          நெறிகள் போதிக்கல் ஆமோ      மன்னவரே

11.   ஆனை இருந்து கொண்டு அரசாளும் மண்டபத்தில்
          அறியாப் பிள்ளை பரதன்        மின்னவரே-சிறு
     பூனை இருந்துகொண்டு புலம்புகிறது போலப்
          புலம்பல் ஆமோ கைகை         மின்னரசே