89 20. தாரைநீர் ஏற்றபோதே என்சரீரம் உமது தம்சரீரம் அல்லவோ மன்னவரே-நீர் ஆரைக்கும் பிடுகிறீர் ஆர்காவில் விழுகிறீர் அசலார் என்றெண்ணலாமோ மன்னவரே 21. அடியில் விழுவேன் என்றும் அடங்கி ஒடுங்கியேநான் அனந்தம் வார்த்தை சொல்லியும் மின்னரசே-சற்றும் கடினம் இல்லாதுபோலே ஈரச்சீலையைப் போட்டு கழுத்தை அறுக்கலாமோ மின்னரசே 22. காட்டுப் புறாவுக்காகச் சதையரிந்த மன்னனை கதையிலும் கேட்டிலீரோ மன்னவரே-உந்தன் வீட்டுப்பெண் சாதிக்காக இத்தனை சாகசமும் வேணுமொ போதும் போதும் மன்னவரே 23. கண்ணும் கருத்தும் ராமன் கண்ணாளனும் ராமன் காப்பவனும் ராமனே மின்னரசே-நான் எண்ணும் தெய்வமும்அவன் அவன்போனால் என்உயிர்போம் இருக்கச்சொல் என்பாய் கைகை மின்னரசே 24. எனக்குப்பொய் வாராது பொய்சொன்னால் தோஷமென்றீர் எந்த மதியாற் சொன்னீர் மன்னவரே-நான் வனத்தில்போச் சொல்லும்என்ற சொல்திருப்பி விட்டாலது மகத்தான பொய்யல்லவோ மன்னவரே 25. ஆனால் ராமனை வனத்திற் போகச் சொல்வதால் ஆவதுண்டோ கைகை மின்னரசே-அருங் கானிலே ராமனைப் போகச்சொல்வ திலும்என் கண் கேட்கிலும் தருவேன் மின்னரசே 26. நானாகச் சொல்லவில்லை தெய்வம் சொல்லியத் துக்கு நான் என்ன செய்வேன் காணும் மன்னவரே-ராமன் போனாலும் கானகத்திலே அவனுக்கு வரும் பொல்லாங்கும் உண்டோ சொல்வீர் மன்னவரே 27. போவென்று சொன்னவுடன் பொறிகலங்கி என்சீவன் போய்விடுமே கைகை சண்டாளி-நான் ஆஎன்று போனபின்னை அள்ளி இடுவார் உனக்கு ஆரடி கைகேசி சண்டாளி |