பக்கம் எண் :

90

28.   ஒட்டாரம் கட்டுகிறாய் ராமன் போனால் என்சீவன்
          உடனே போமடி கைகை              சண்டாளி-நீ
     கட்டியதாலிக் கயிற்றை உன் மகற்குப் பட்டங்கட்ட
          காப்புகட்டடி கைகை             சண்டாளி

29.   வரதமுனிவனான வதிஷ்டமுனியே உன்னை
          வரம் கேட்கிறேன் தாராய் என்    தெய்வமே-அந்த
     பரதன் வந்தால் அவன் உற்றுரிமை செய்யாமல்
          பத்து தரமாய் சொல் என்        தெய்வமே

30.   அண்டர் முனிவர் அல்ல பகையாளிகள் அல்ல
          அசலார் ஒருவர் அல்ல     தெய்வமே-தீமுன்
     கொண்டபெண் சாதிதானே தசரதன் ஆவிக்கு
          கூற்றுவன் ஆய்வந்தாளே    தெய்வமே

31.   ஒளிவாய் இருந்துகொன்ற பிள்ளைப் பழிக்குமுனி
          உரைத்த சாபமிதுவோ தெய்வமே-உலகம்
     எளியாரை வலியார் அடித்தால் வலியாரைத் தெய்வம் கேட்கும்
          என்பது இதுதானோ தெய்வமே

32.   பண்ணிட்ட எறும்புக்கா புருஷனைக் கொல்லவந்த
          பாவிதன்பெண் இவள்அல்லோ         தெய்வமே-இந்த
    மண்ணுக்குள் தாயைப் பார்த்துப் பெண்ணைக்கொள் என்றுசொல்லலும்
         வசனம் பிசக வருமோ                தெய்வமே

33.  உதிக்கும்கண் போனாலென்ன உயிர்போனாலும் என்
          உத்தமன் ராமன் மாத்திரம்       தெய்வமே-அயோத்தி
     பதிக்குப் பதியாகியே இருக்கிறான் என்றுகாணாப்
          பாவிநான் ஆயினேனே          தெய்வமே

------    

கைகேசி ஸ்ரீராமரை வனத்துக்கு ஏவுதல்

விருத்தம்-8

     கொன்றவன்போல் தசரதனிப் படிபு லம்பக்
          கூற்றுவன் போல் கைகேகி ராமன்தன்னை