தனனா-தனதனனா-தன-தானன தானன தானான அவ்றங்கு செய்கு சாகிபுவின் சேனை செஞ்சியிற் பாளயமிறங்கியது நொண்டியின் நடத்தை அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம் வைத்தவ னிருகண் போல வளர்த்தெனைக் காக்குநாளில் முத்தலம் புகழும் செஞ்சி முதுநக ராமு ராயன்O அத்தல மிழந்த வாறு மவ்றங்கு செய்கு சாகிப்O கைத்தலம் பரிமாக் கொண்டு கலந்ததும் விளம்பு வேனே. தரு-இராகம்- மோகனம் - தாளம்-ஆதி 65. கசரத துரகதத் தான் காயலில் விசயரகுநாத பெரியதம்பி புசபல ரணசூரன் புகழ்வளர் நசைமிகு செஞ்சி நகர் தனிலே 66. மாறாட்டத் துறைகளிலே மதகரி ஏறான சீ கோஜி O ராயன் மைந்தன் தேறார்கள் பணிசரணன் றிசையெங்கும் வீறான நகரெங்கும் விளங்கும்பிரான் 67. செகமண்ட லீகர்கண்டன் செவ்விமதி முகமண்ட லசுகந்த மோகமதன் மகிபதி சுகலளி தன்வாதாடு மிக மருவலர்புலி ராமுராயன் 68. வெங்கோப வாரணத் தான் விகசித பங்கேருகப் பெண்வளர் பாக்கியவான் சங்கிராம கெம்பீ ரன்றரையினிற் செங்கோல் மனுநெறி செலுத்தும்பிரான் |