பக்கம் எண் :

நொண்டி பாசறை சேர்தல்21


    93. நலம்புனை சுலூபுகான் கூடாரத்
           தாசார வாசலதுவுங்கண்டேன்
        ஈடற்ற படைநெருங்கும் வங்கார
           ஏசப்ப நாயக்கன் வாசல் கண்டேன்

     94. கூடாரவாயிலி லேலாடர்கள்
           கூட்டமும் பக்கீருக் * கூட்டங்களுஞ்
        சோடாக விருக்கக் கண்டேன் மனதினிற்
           சூழ்ச்சியொடு கையெடுத்துத் தாழ்ச்சி செய்தேன்

     95. ஆவுரே கான்சே ஆயெ வென்றார் சாகிபுநான்
           ஆபுலக்கா புலத்தெ ஆயெவென்றேன்
        காவுரே கானாவென்றா ரிதுநல்ல
           கருமமென்றேசென் றருகிருந்தேன் *

     96. கடைபடு கஞ்சாத் தண்ணீர் பாத்திரத்திற்
           கட்டளையிட்டார்பிரமன் கட்டளையென்றே
        யிடையூறு பேசாமல் மண்டிபோட்
           டிருந்து பிசுமிச்சொல்லி * யருந்தினனே

     97. கறிகளும் ரொட்டிகளும் அவரவர்
           கைதோறு மெய்வழக்கஞ் செய்தார்களே
        அறிவுள்ள பெரியவர் போல் நானுமதை
           ஆசாரத்தோடு கொண்டேன் கூசாமலே

     98. கலங்கிய பங்கிவெறி யால் கண்சிவப்புங்
           கலந்திடநாவும் பல்லும் உலர்ந்திடவே
        மயங்கிடுதியக்க மொடு காலுங்கையு
           மடக்கியொருபுறத்தில் முடங்கினனே