123. கறுப்புக் கண்டால்வரு வார்துலக்கர் * கபடரென்றேநினைத் தவிடம்விட்டே சுறுக்குடன் கிடந்துருண்டேன் நான்செய்த துர்ச்சனத்துக்கானகர்ம லட்சணம்போல் 124. ஐயையோ நெருஞ்சிமுள் ளுமுனைக்கல்லும் அழுத்தி முதுகினெஞ்சிற் கிழித்திடவே கையொடுகால்பத றியுருண்டிடும் கலக்கத்திலே விழுந்தேன் சலக்கத்திலே 125. தாழ்ந்துருண்டோடிவந் தேயேதுங்கெட்ட சதுக்கான குழியினிற் சொதுக்கெனவே வீழ்ந்தவன் கள்ளனென் றேகாரியம் வெற்றிதானென்று வந்து சுற்றினாரே 126. சுற்றிலே வளைந்துகொண் டுதுலுக்கருந் தொடுகட லென்னவந்த வடுகருடன் பற்றுவார் தொங்கசிக்கினோ அரேயொக்க பட்டு பட்டு கட்டுவேசு கொட்டு கொட்டென்பார் * 127. சோரேபக்கடேயென் பார் அரேபேட்டிச் சோதுமதுத்திரு வாதியென்பார் * ஏலாதகளவு செய்த கள்ளனிவன் எந்தநர கத்தழுந்த வந்தவனென்பார் 128. உச்சிசூழ்மகனிவனுங் குதிரையை யுச்சிக் கொள்ளவந்தானென்று கச்சிப்பிச்சென்பார் எச்சிப் போய்க்கிடக்கிறானென்பா ரினிக்கரை யேற்றுமென்பார் பொறு நாற்ற மென்பார் |