195. விஞ்சையற் கனுகூ லன் காயலில் விசயரகுநாதப் பெரியதம்பிக் கஞ்சமலர்ப்பாதத் தைக் கண்ணாரக் கண்டுகளி கூர்ந்து நான் தெண்டனிட்டேன் 196. அடைக்கலங் காத்த பெரு மான் மன்னவர்க் கரசு நிலை நிறுத்துஞ் செய்தக் காதி கடைக்கண்ணாலருட் பார்வையைக் கண்ணாரக் கண்டு களிகூர்ந்து தெண்டனிட்டேன் 197. தெண்டனிட்டு வணங்கிநிற் கச் செய்தக்காதி திருமுக மலர்ந்தரு ளகங்குளிர்ந்து பண்டுபழகினவர் போல அடியேன் பாட்டையுஞ் செவிதாழ்த்திக் கேட்டன னே 198. கேட்டுமன மதிலிரங் கி யென்னுடைய கிலேசந்தவிர நல்ல வாசகஞ் சொல்லி நாட்டிற் றிரிந்து பிழைப் பா னிவன்றனை நாமிசுலாத்திலாக்கு வோமெனவே 199. தாராள மாநினைந் தே யடியேன் தன்கையி லாயிரம் பொன்கொடுத் துப் பேரானச தக்கத்துல்லா முன்பாகப் பேதமில்லாக் கலிமா வோதச்சொல் லி 200. பரிவுசெய்தனுப் பினன் பின் குத்துபாப் பள்ளிவாயிலிற் சென் றுட்புகுந்தே எரிகதிர் மணித்தவிசில் ஆலிம்கள் எல்லாருடன் சதக்கத்துல் லாவைக் கண் டேன் |